Category யாழ்ப்பாணம்

கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன. 

கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன.  யாழ்ப்பாணம் கற்கோவள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள் இருந்து மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன.  குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

தனியார் காணிகளில் இருந்து வெளியேற மறுக்கும் கோப்பாய் பொலிஸார்

கோப்பாய் பொலிஸார் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி தங்கியுள்ளதுடன் , அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாக கோப்பாய் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1995ஆம் ஆண்டு காலம் முதல் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள 09 தனியார் வீடுகளையும் அதனுடன் கூடிய காணிகளுமாக 2.77 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி 30…

அச்சுவேலி கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிலுவையை விட்டு சென்ற இராணுவம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை அலுவலக கட்டடத்தில் 30 வருட காலங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை நிலுவையாக விட்டு சென்றுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த கட்டடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த…

” எங்கள்  தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் “

” எங்கள்  தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் ,  தெல்லிப்பளை வைத்தியசாலை போர் மற்றும்  இடப்பெயர்வுகளின்…

யாழில் வெடிமருந்துகள் மீட்பு!

யாழில் வெடிமருந்துகள் மீட்பு! ஆதீரா Thursday, June 12, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் குருநகர்  பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்தவர்கள் வெடிமருந்துகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெடிமருந்துகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.  சம்பவம்…

இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது

இலங்கையில், வடமாகாணத்திலையே வீட்டு திட்டத்திற்காக அதிக தொகையாக 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும்…

வடக்கில் 18 இலட்ச ரூபாய் வீட்டு திட்டத்திற்கு 14 பயனாளிகள் தெரிவு

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் (PSDG) முன்னெடுக்கப்படும் தலா 18 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதல்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.  வடக்கு மாகாண ஆளுநரிடம்,…

வடக்கில் பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்க பணிப்பு

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறும், அதனை உடனே ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.  அதன் போது,…

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான  உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில்  வைத்து  வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு…

ஈபிடிபி ஆபத்தானதென்கிறார் கஜன்!

உள்ளுராட்சி சபைகளில் கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட தரப்புக்களே ஆட்சி அமைக்கவேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் அணி வலியுறுத்திவருகின்றது. எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக தமிழ் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து அணியாக சபைகளை கைப்பற்ற முற்பட்டதையடுத்து தமிழரசுக்கட்சி ஈபிடிபி ஆதரவை நாடியுள்ளயுது. இந்நிலையில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்ந்து செயலாளர் செல்வராசா கஜேந்திரனும்…