Category யாழ்ப்பாணம்

கனடா ஆசை நிறைவேறாதால் யாழில். உயிர்மாய்த்த இளைஞன்

கனடா நாட்டிற்கு செல்லும் தனது கனவு நிறைவேறாத நிலையில், யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் காணாமல் போன நிலையில் , இளைஞனின் சகோதரன்…

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த தென்னை ஓலைகளை கழுவுங்கள்

வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை , சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய…

வடக்கில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இராணுவத்திடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது

வடமாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினரிடம், ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.  வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.  அதேவேளை…

மான் யார் பக்கம் பாயும்?

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிப்பட்ட போதும் யாழ் மாநகர சபையில் தமிழ் கட்சி ஒன்றுக்கு தமது ஆதரவு நிச்சயம் இருக்கும் என முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வருகின்ற மாதம் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வருகின்றது. வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில்…

மஹிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்.  தேசிய மக்கள் சக்தி என கூறிக்கொள்ளும் ஜே.பி.வி யினர் அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றனர்.  யாழ்ப்பாணத்தில்…

யாழில்.பொலிஸாரினால் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்படும் இளைஞன் – வலுக்கும் கண்டனங்கள்

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கூட்டத்திற்கு செல்லவில்லை என கூறி இளைஞன் ஒருவரை கைது செய்து பொலிஸார் மனிதாபிமானற்ற இந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.  குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான…

யாழ. மாநகர சபையில் யாருக்கு ஆதரவு ?

யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால், சக தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக, யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபையில் நாம்…

தேர்தல் ஆணைக்குழு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு , தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளதாக சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ் , மாநகர சபை…

முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பாப்பரசர் .

இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.  பரிசுத்த பாப்பரசரின் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில் ,  இறைவன் இவரது ஆன்மாவுக்கு நித்திய…

தேர்தலுக்கு முன் யாழ் மற்றும் கிளிநொச்சியில் சில காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கேட்ட போது, மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிக உறுதியாக உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிப்போம்.…