Category யாழ்ப்பாணம்

சாமியின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை

சாமியின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது புகழுடல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் , நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ,  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார்

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சமூக மற்றும் சமயப் பணிகளில் எஸ்.பி. சாமி அவர்கள் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜால்ரா ஆளுநர்?

வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூநகரியின் வாடியடியினை நகரமயமாக்க ரணில் விக்கிரமசிங்காவால் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் நிதி அனுர அரசால் ஒரு சதமும் செலவின்றி திருப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியமைக்கு, வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக,…

கஜேந்திரன் , வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைப்பு

கஜேந்திரன் , வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைப்பு ஆதீரா Wednesday, February 19, 2025 யாழ்ப்பாணம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள்   ஆகியோரை வாக்குமூலம் அளிக்க பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி நடாத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலம் சேகரிக்க பொலிஸாரால்…

80 இலட்ச ரூபாய் போலி விசாவுடன் கனடா செல்ல முயன்ற யாழ்.தம்பதி கட்டுநாயக்கவில் கைது

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்று முன்தினம்…

யாழில் ஆமை , ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும்  20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  குருநகர் இறால் வளர்ப்பு திட்டம் பகுதியில் கடலில் இருந்து பிடித்து வரும் ஆமைகளை பாதுகாத்து, அவற்றை இறைச்சியாக்கி விற்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற…

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் – பொலிசாரின் முறையற்ற செயற்பாடே காரணம்

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார்.  முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம்…

யாழ். நோக்கி ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது தாக்குதல்

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் பேருந்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதலை மேற்கொண்டதில், பேருந்தின் கண்ணடிகள் சேதமடைந்துள்ளன.  வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில் வாடகைக்கு பேருந்தினை சேவைக்காக அமர்த்தி அதில் பயணித்து பாடசாலைக்கு…

எம்மை பயன்படுத்தி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்க முடியாது.

எம்மை இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சீனா பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ்  மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்  கடந்த…

அரியாலையில் டிப்பர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அரியாலையில் டிப்பர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.  அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்  சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.