Category யாழ்ப்பாணம்

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் கொத்து தயாரித்தவருக்கு 40 ஆயிரம் தண்டம் – மற்றுமொரு உணவகத்திற்கு

யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  ஆனைக்கோட்டை பகுதியில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த  உணவக உரிமையாளருக்கும் , மற்றுமொரு உணவகத்தில்…

ஒரே நாளில் மன்னார்-நெடுந்தீவில் கைதுகள்!

இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வகையில் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது…

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான பகுதியை ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன  அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி! யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும்…

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – 02 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார்

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை  பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.  தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்கு மூலம்…

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீபன் தெரிவித்துள்ளார்.  கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபர்கள்…

யாழில். வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே உயிரிழந்துள்ளார்.  பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள் அதிபரும் கடந்த சனிக்கிழமை பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை தனங்களப்பு பகுதியில் நிறை போதையில் நின்ற வன்முறை…

வெளிநாட்டில் உள்ளவரின் நிலையான வைப்பில் மோசடி – யாழ். வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார்.  அவர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில்…

வெளிநாட்டில் இருந்து வந்தவர் ,யாழில். தனது தந்தை , சகோதரன் மற்றும் பெறாமகன் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோரே மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் காயமடைந்த மூவரும் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,…

வடக்கு கடலில் 10 தமிழக மீனவர்கள் கைது

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன் மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் மன்னார் கடற்பரப்பில்…