Category யாழ்ப்பாணம்

தையிட்டி விகாரையில் மற்றுமொரு சட்டவிரோத கட்டடம் – கைவிலங்குகளுடன் வந்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றன அந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு…

தமிழக முகாம்களில் 58,104 ஈழ அகதிகள்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியாவில் தங்கியுள்ள…

யாழில். மின்கலங்களை திருடிய குற்றத்தில் கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வந்துள்ளன.  இது தொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில், குறித்த நிறுவனங்கள்…

சேவையாற்ற துடிப்பு :2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக  25 மாவட்டங்களிலும்  336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…

வேட்பு மனு நிராகரிப்பு – உயர் நீதிமன்றம் செல்லும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக நாளை மறுதினம் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  வேட்பு மனு நிராகரிப்புக்கள் தொடர்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  கட்சிகள்  சுயேட்சைக் குழுக்கள் என நாடு முழுவதும்…

வேட்பு மனு நிராகரிப்பு – இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம்

நிராகரிக்கப்பட முடியாது என சொல்லப்பட்ட சட்டத்தை வைத்து எமது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். இது இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  யாழ் மாநகர சபைக்கான தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு நேற்றைய தினம்…

யாழில். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நின்ற யுவதி கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.  குறித்த பெண்ணிடம் இருந்து ஐஸ்…

யாழில். நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இணுவில் பகுதியை சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) எனும் இளைஞனே , உயிரிழந்துள்ளார்.  இணுவில் பகுதியை சேர்ந்த 14 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று மாதகல் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.  இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை பாரிய அலை…

யாழில் 338 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 338 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்றும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.  பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பகுதியில் பெருந்தொகை கஞ்சா போதை பொருள் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவற்றை கைப்பற்றினர்.  கடற்கரையில் 154 பொதிகளில் காணப்பட்ட சுமார் 338…

யாழில். சீன ஊசி சொக்லேட் வைத்திருந்தவருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட , மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி.அஜந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டு…