Category யாழ்ப்பாணம்

யாழில். 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வீதியில் சென்ற பாரவூர்தி ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.  வாகனத்தினுள்…

வடக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் 'டிஜிட்டல்' திரையில்

சகல சந்தைகளிலும் ஏனைய சந்தைகளின் முதல் நாள் மரக்கறிகளின் விலைகளை ‘டிஜிட்டல்’ திரை மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுத்தியுள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்  இடம்பெற்றது.  அதன் போது, உள்ளூராட்சிமன்றங்களுக்குச் சொந்தமான சந்தைகளில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு…

வீதி மின் விளக்குக்கு கட்டணம் அறவிட்டால் , மின் கம்பங்களுக்கு கட்டணம் அறவிடுவோம்

வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிட வேண்டியிருக்கும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.  அதன் போது, வீதி மின்விளக்குகள் பொருத்துவதில்…

யாழ்ப்பாண விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.   யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கா உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

நாலாவதாக சந்திரசேகரன் படையாம்??

இந்திய சினிமா பாணியிலான தேர்தல் பரப்புகைளில் ஜேவிபி களமிறங்கியுள்ளது.ஜேவிபியின் வளங்குறைந்த அமைச்சரான சந்திரசேகரன் மற்றும் அவரது அல்லக்கை இளங்குமரன் இருவரதும் கூத்துக்கள் நாள் தோறும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறிவருகின்றது. இந்நிலையில் வடக்கில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றப்போவதாக சொல்லிவரும் ஜேவிபியினர் இன்று யாழ்.பேரூந்து நிலையத்தில் கழுவி பெருக்கும் நடவடிக்கையில் குதித்தனர். ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச்சபை பணியாளர்கள் அங்கயன்…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பிமல் ரத்னாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் விமான நிலையத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும், அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் விமான நிலைய அதிகாரிகள், தொழினுட்பவியலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர் குறித்த அமைச்சர்…

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.  திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.  நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் , விமான நிலைய…

யாழில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து கஞ்சா கலந்த மாவா பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது  கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்…

யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் இந்திய துணைத் தூதுவர்

யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் இந்திய துணைத் தூதுவர் முன்னாள் யாழ் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய ஆ.நடராஜன் நேற்றைய தினம் சனிக்கிழமை மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இல்லத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அதன் போது, மூளாயில் அமிர்தலிங்கத்தின் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து…

“நாங்கள் அப்ப கோப்பைகளா ?” – இளங்குமரனுக்கு வந்த சந்தேகம்

யாழ்ப்பாணத்தில், வலு சக்தி அமைச்சரின் நிகழ்வில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில்  சமூக வலைத்தளத்தில் ஊடகவியலாளர்கள் பதிவிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்துள்ளார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின்  பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின்…