Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது…
யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு ஆதீரா Wednesday, April 02, 2025 யாழ்ப்பாணம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே…
பின்தங்கிய பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டால் தான் அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் வரும். எனவே திணைக்களத் தலைவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் சுழற்சிமுறையில் பின்தங்கிய கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுங்கள். என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர்…
தொழிற்சாலைகள் வடக்கில் மூடப்பட்டுள்ளதால் இளையோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். விவசாயம் மற்றும் மீன்பிடி வடக்கின் முக்கிய துறைகளாகவுள்ள நிலையில் உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் அதிகளவானோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் என உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண நா.வேதநாயகன் எடுத்துக்கூறியுள்ளார். உலக வங்கியின்…
மக்களை வெளியேற்றப்போவதில்லை. புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை என வடமராட்சிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் செவ்வாய்க்கிழமை (01) காலை பத்து மணியளவில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றனர். குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள்…
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார். விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பல்கலை மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில், பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக…
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலந்துரையாடலில், நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்பட்டதுடன், அவசர தேவைக்குரிய விண்ணப்பங்களை நேரடியாக ஒப்படைக்குமாறும்,…
குப்பைகளைக் கொட்டுபவர்கள் தொடர்பில், அவர்களை அடையாளப்படுத்தினால் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றுச்சூழல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதன் போது, செம்மணி, வல்லைவெளி, கைதடி – கோப்பாய் வீதிகளில் கோழிக்கழிவுகள் முறையற்ற…
ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறை – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரின் எதிர்பாராத துயரத்திற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை…