Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளுராட்சி சபைகளில் கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட தரப்புக்களே ஆட்சி அமைக்கவேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் அணி வலியுறுத்திவருகின்றது. எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக தமிழ் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து அணியாக சபைகளை கைப்பற்ற முற்பட்டதையடுத்து தமிழரசுக்கட்சி ஈபிடிபி ஆதரவை நாடியுள்ளயுது. இந்நிலையில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்ந்து செயலாளர் செல்வராசா கஜேந்திரனும்…
வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளது ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கட்சிகள் போட்டிபோட்டவாறாக உள்ளடி வேலைகளை முன்னெடுத்துவருகின்றன. இந்நிலையில் பெரும்பான்மை மூலம் ஆட்சியை கைப்பற்றிய பூநகரி பிரதேசசபையின் முதலாவது அமர்வு அமைதியான முறையில் இன்று நடந்தேறியுள்ளது.தமிழரசுக்கட்சியின் சிவஞானம் சிறீதரனது ஆதரவு தரப்பினை சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் சகிதம் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகள் போட்டிகள் ஏதுமின்றி ஆட்சியை தக்கவைத்துள்ளன.…
விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து! தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு…
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள்…
யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன் , அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக சட்டத்தரணியின் புகைப்படத்துடன் போலியான தகவல்களுடன் சமூக…
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன. முன்னதாக,…
யாழில். வீட்டில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு ஆதீரா Wednesday, June 11, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்த பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமான கட்டப்பட்டுள்ள விகாரையில் நடைபெற்ற பொசன் சிறப்பு வழிப்பாட்டிற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வந்த இளைஞன் ஒருவர் விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார் அதனை…
சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி…
பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அலுவலர்கள்…