Category யாழ்ப்பாணம்

யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது ஆதீரா Saturday, April 19, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதை பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , தட்டாதெரு பகுதியில் இரு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட போது அவர்களின் உடைமையில்…

தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்தின் முக்கிய பங்காளர்கள் ஜே.வி.பி யினரே

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அனுர…

திஸ்ஸ விகாரை:ஜேவிபியும் காரணமாம்!

“இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அநுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய கரணமாக இருந்தது. அவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர் என கஜேந்திரகுமார்…

சந்திரசேகரனின் முறைகேடுகள் வெளிவருமா?

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனின் யாழ்ப்பாணத்தில் செய்த முறைகேடு உள்ளிட்ட சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுமென  வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன.…

ஈஸ்டர்: பாதுகாப்பு மும்முரம்!

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஸ்டானங்களை நடத்தும் வடகிழக்கிலுள்ள தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி வழிபாடுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத வழிபாடுகளும் தேவாலயங்களில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதிக…

தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபடும் ஜனாதிபதி

‘ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,  தமது தேசிய மக்கள் சக்தியினரை மக்கள் தெரிவு செய்தால், அந்த நிர்வாகத்தின் திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு…

டக்ளஸ் கைது:சந்திரசேகரனும் சாட்சி!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப்பூங்காவில்  இன்று(17) ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற பிரசார…

அனுர ஜனாதிபதியாக முதலில் இருக்கட்டும்!

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாக உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்போவதில்லையென்ற அனுர திசநாயக்கவின் கருத்து கடுமையாக சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. எந்தக் கட்சி உள்ளுராட்சிசபையை கட்டுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே நிதி ஒதுக்கீடு என்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதி, “நிதி ஒதுக்குவதற்கு முன்,…

வடக்கிலும் கடத்தல்காரர்கள் உள்ளனர் – அவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை

வடக்கிலும் மண் கடத்தல் காரர்கள் உள்ளனர்,  ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர். ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக்…

காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்  யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்  அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு…