Category யாழ்ப்பாணம்

பிள்ளையானால் சிறையில் இருக்கும் அம்மாவை விடுவியுங்கள்

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக…

ஜே.வி.பி யினரே மிகவும் இனவாதத்துடன் பயணிப்பவர்கள்.

வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக…

யாழ். பல்கலையில் “வேரிலிருந்து விழுது வரை”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் முன்னெடுத்த “வேரிலிருந்து விழுது வரை” ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல…

யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, பொது சுடரேற்றி, மெழுகுவர்த்திகளும் பற்ற…

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது ஆதீரா Monday, April 21, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நுணாவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். …

யாழில் மூதாட்டி அடித்துக்கொலை

யாப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் இன்றைய தினம்…

எமக்கு மத்தியின் எந்த நிதியும் வேண்டாம் – உள்ளூராட்சி வருமானத்தில் அபிவிருத்திகளை செய்வோம்

நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என  யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில். தனது கட்சியிடம் அதிகாரம்…

சுதேச மருத்துவர்களை பயன்படுத்துங்கள் – நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம்

நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள்  சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடக சந்திப்பின் போதே தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்  நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த, என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம்  இருக்கின்றது. …

வீடு வீடாக டக்ளஸ்?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பல அரசியல் தலைவர்களை அரசியல் அரங்கில் காணாமல் ஆக்கிவிட்டது.புலிகளது கோட்டையான வடமராட்சியில் கூடிய விருப்பு வாக்கு பெற்றதாக சொல்லித்திரிந்த அங்கயன் இராமநாதன் இருக்கும் இடம் தெரியாது காணாமல் போய்விட்டார். அதே போன்றே 30வருட அரசியல் தலைவர் என அழைக்கப்பட்ட டக்ளஸ் வீடு வீடாக வாக்கு கேட்டு புறப்பட வைத்துள்ளது சமகால்…

யாழ். பல்கலையில் அன்னை பூபதி அம்மாவின் 37வது ஆண்டு நினைவேந்தல்

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது அகவணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில்…