Category யாழ்ப்பாணம்

யாழில். அதிகரித்த வெப்ப நிலையில் யோக்கட் எடுத்து சென்றவருக்கு 30 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன்,  கைப்பெற்றப்பட்ட யோக்கட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யோக்கட்களை 06 செல்சியஸ் வெப்ப நிலையில் கூலர் வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் அதன் வெப்ப நிலையை அதிகரித்து 18 செல்சியஸ் வெப்ப நிலையில்…

யாழில். புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆயிரம் தண்டம்

புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட…

வவுனியாவில் 5 உணவகங்களுக்கு சீல் – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்

வவுனியாவில் உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 05 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , காலாவதியான பொருட்களை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  வவுனியா தெற்கு இரட்டைபெரியகுளம் பகுதியில், புத்தாண்டு தினத்தன்று அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரால் , உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவை…

யாழில் 21 ஆயிரத்து 064 பேர் அஞ்சல்  மூலம் வாக்களித்கத் தகுதி

உள்ளூர் அதிகார சபைகள்   தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாக மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது.  யாழ்பாண  மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல்  மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்காக யாழ்ப்பாணத்தில் 292 அஞ்சல் மூல வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.  நாளைய தினம்…

யாழில். 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,   நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை…

யாழில். தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாக 52 முறைப்பாடுகள்

ஆதீரா Thursday, April 24, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வரை, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 52 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

கஜேந்திரகுமார் அணிக்கே எமது ஆதரவு – யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம்

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்…

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன் ,  வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  காங்கேசன்துறை பகுதியில் பெரியளவிலான தங்குமிடம் ஒன்றினை அமைத்து வரும் நபர் ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை…

கனடா ஆசை நிறைவேறாதால் யாழில். உயிர்மாய்த்த இளைஞன்

கனடா நாட்டிற்கு செல்லும் தனது கனவு நிறைவேறாத நிலையில், யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் காணாமல் போன நிலையில் , இளைஞனின் சகோதரன்…

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த தென்னை ஓலைகளை கழுவுங்கள்

வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை , சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய…