Category யாழ்ப்பாணம்

காரைநகரில் வேட்பாளரை தாக்கி , சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவரது சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  காரைநகரில் முன்னாள் தவிசாளரும் , தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளருமான கணேசபிள்ளை பாலசந்திரன் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  காரைநகரில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தான் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த…

யாழில். கட்சியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது ஊடக பணிக்கும் இடையூறு விளைவித்துள்ளனர்.  வேலணை துறையூர் பகுதியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றிக்கு அருகில் கட்சியின் ஆதரவாளர்கள் முரண்பட்டு கொள்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ,…

வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த யாழ்.மாவட்ட செயலர்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த யாழ்.மாவட்ட செயலர். ஆதீரா Tuesday, May 06, 2025 யாழ்ப்பாணம் நடைபெற்று வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு  அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. அந்நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் நேரில் சென்று…

படகில் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வந்தவர் கைது

படகில் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வந்தவர் கைது தமிழகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 2023ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் , படகு மூலம் தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்று தஞ்சமடைந்த நபர் , மீண்டும் இலங்கைக்குள் படகு மூலம்…

யாழில்,மர்மமாக உயிரிழந்த சிறுவன் – உடற்கூற்று பாகங்கள் கொழும்புக்கு

யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் , சிறுவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சசிதரன் திசானுஜன் (வயது 15) எனும் சிறுவன் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளான். சிறுவனின் உடல்…

யாழில் வீசிய காற்றினால் 8 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு காலநிலை சீரின்மையால்  8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/203 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5பேர் மின்னல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.…

யாழில். 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள்  தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில்…

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல் நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் இன்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.   நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளரான முருகேசு அமிர்தமந்திரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர். தாக்குதலுக்கு இலக்கானவர், தலையில் காயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு…

யாழில். 17 சபைகளுக்கு தேர்தல் – 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன. குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519…

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – பொலிஸார் விசாரணை

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – பொலிஸார் விசாரணை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.  தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை…