Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில்…
யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது. வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி…
பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் பறிக்கப்பட்டுள்ளன. வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று…
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய…
அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி…
யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேன்படுத்தும் நடைபயணம் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். தாதிய கல்லூரியின் முன்றலில் ஆரம்பமான நடைபயணமானது மணிக்கூட்டு கோபுர வீதியூடாக யாழ். பொதுநூலகம் வரை சென்று, அங்கிருந்து கண்டி பிரதான…
குமுதினி படுகொலையின் 40 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை நினைவுச் சுடரினை இந்து மதகுரு கா.புவனேந்திரசர்மா ஏற்றிவைத்தார். தொடர்ந்து நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார், தென்னிந்திய திருச்சபை வணபோதகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மற்றும்…
தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி நேற்றைய தினம் புதன்கிழமை விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தார். ஜனாதிபதியின்…
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில் வைத்தியர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து பொலிஸார் சிறுமியிடம்…
இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கொக்கிளாய், சேப்பல் தீவு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே…