Category யாழ்ப்பாணம்

உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை

அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும்…

வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள்அணிந்து செல்ல தடை ?

வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர்.  வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.  இந்தச் சந்திப்பின் போதே அவ்வாறு முறையிட்டுள்ளனர்.  குறித்த சந்திப்பில், …

ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியிட வேண்டும்.

ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை புண்ணிய பிரதேசமாக வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ச் சைவ பேரவையினர் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை…

யாழ். பல்கலை பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டி நடைபவனி

யாழ். பல்கலை பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டி நடைபவனி யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது  யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பட்டப்பின்படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி.…

நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறையில் நடைபெற்ற கலந்துரையாடலில்…

காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்டத்தரணிகள் குழாமுடன் களமிறங்கும் சுமந்திரன்

காணி அபகரிப்பு நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்தமையால் நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், வடக்கில் வவுனியா தவிரந்த நான்கு மாவட்டங்களில் 5,940  ஏக்கர் காணியை…

நல்லூர் அசைவ உணவகம்: கண்கொள்ளாத மாநகரசபை: ஆளுநரிடம் முறைப்பாடு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும்நல்லை சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகில…

யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

மதுரி Saturday, May 24, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப காவல்துறைப் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயது மதிக்கத்தக்க…

நேற்று சொன்னது என்னாச்சு?

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற தேசிய மக்கள் சக்தியினர் தயாரித்து வெளியிட்ட பாடல்கள் தலையிடியாக மாறத்தொடங்கியுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையை கைபற்றி ஆட்சியமைத்த பின்னர் தலைவர் பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் தற்போது குத்துக்கரணமடித்துள்ளதுடன் சிலை அமைப்பது தொடர்பில் தான் ஒருபோதும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என…

“இலங்கைக்கான பாடங்கள்” – சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்புரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சிறப்புரை இடம்பெற்றது. “சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் முழுமையான வறுமை ஒழிப்பு: இலங்கைக்கான பாடங்கள்” எனும் தலைப்பில் குறித்த உரை நிகழ்த்தப்பட்டது.…