Category யாழ்ப்பாணம்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது

மிகப்பெரும் இனப்படுகொலை  இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு ஆதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை…

யாழில். போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சுன்னாகம் [பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.  தொடர் விசாரணைகளை முன்னெடுத்த…

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பெண் உயிரிழப்பு – மருத்துவ தவறே காரணம் என குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சையின் பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் , பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவ தவறே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த 23ஆம் திகதி பித்தப்பையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் , பெண் மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் , மேலதிக சிகிச்சைக்காக 25ஆம் திகதி யாழ்…

வடக்கில் காணிகளை விடுவித்தால் தெற்கில் எதிராக குரல் கொடுக்கிறார்கள்

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர்…

வடக்கில் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் 'க்ரோ' (GROW) திட்டம்

3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், 3 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள ‘க்ரோ’ (GROW) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸ், இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெம் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்தத் திட்டத்தின்…

யாழில். வெளிப்படுத்தல் உறுதிகள் மூலம் காணி மோசடிகள் – விசாரித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

அரசாங்கத்துக்கு தவறான தகவல்களை வழங்கி சில திணைக்களத்தின் அதிகாரிகள் செயற்படுகின்றனர். அதனால் வடக்கு மாகாணம் பெருமளவு பாதிப்பை இன்றும் எதிர்கொண்டிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அவுஸ்திரேலியத் தூதுவரிடம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில்ம் நேற்றைய செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்தச்…

யாழில். துரித கெதியில் புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்

யாழில். துரித கெதியில் புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார். இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.  மேலும், கடவுச்சீட்டு பெற…

யாழ் – நெடுந்தூர போக்குவரத்து சேவை பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள்

யாழ் – நெடுந்தூர போக்குவரத்து சேவை பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சனைக்கு  விரைவில் தீர்வைப் பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. ஆரியகுளம் பகுதியில் உள்ள, வரையறுக்கப்பட்ட யாழ். மாவட்ட தூர…

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க கோரிக்கை

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய…

யாருக்கு சொந்தம்!

இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய நிலசுவீகரிப்பு வர்த்தமானி திரும்ப பெறப்பட்டுள்ளநிலையில் தமிழ் கட்சிகள் போட்டிபோட்டவாறு உரிமை கோரத்தொடங்கியுள்ளன. வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக கடந்த மார்ச் 28,  அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியையே அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன…