Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளனர். தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது.…
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன்…
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை பரீட்ச்சார்த்த சேவையாக நடைபெற்றது. டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட …
தமிழ் தரப்புக்களிடையே இணக்க முயற்சிகளை முன்னெடுத்தவர்களையெல்லாம் துரோகிகள் அல்லது இந்திய உளவாளிகளென சாயமடித்த முன்னணியின் தமிழ் தேசிய பேரவை கதிரைக்காக ஆலாய் பறக்கிறது.அதிலும் ஈபிடிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அங்கம் வகிக்கின்ற கூட்டணிக்கும் தயார் என முன்னணி இறங்கிவந்துள்ளது. முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன கூட்டணி உடன்பாட்டை பெரும்பாலும் இறுதி…
பரிதாபம்:தந்தையை தொடர்ந்தும் மகனும் மரணம்! தூயவன் Sunday, June 01, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைக் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிந்த நிலையில் விபத்தில் பலியான சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்களது மகனும் மருத்துவசிகிச்சை பலனின்றி இன்று அகால மரணமடைந்தார். வவுனியாவில் நடைபெற்ற வாகன விபத்தில் பிரபாகரனின் புத்திரனும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான மனைவியும்…
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1981 மே 31…
யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது. இந்த…
வடமாகாணசபை தேர்தலில் தும்புத்தடியொன்றை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்தே வருகின்றது. நேற்றைய தினம் தமிழரசு –முன்னணி தலைவர்கள் சந்திப்பு முடிந்து புறப்படும் போது தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் ஒரு கேள்வி கேட்டார்.…
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் இன்று உறுதியுரையினை செய்தார். யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்…
தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், நகைகளை அடகு வைத்தவர்களில் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் என்பவரே…