Category யாழ்ப்பாணம்

செம்மணி :தாமதம் வேண்டாம்!

யாழ் – செம்மணி மனிதப் புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேச கண்காணிப்புடன் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டும் .அத்துடன்  நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி அகழ்வுப் பணியை இடைநிறுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி இன்றையதினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில்…

பிச்சை பாத்திரம் ஏந்தியே வந்தனே தோழரே?

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சியிடம் ஆதரவு கோரியிருக்கின்றோம். கட்சியுடன் பேசி முடிவைச் சொல்வதாக கட்சியில் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியின் ஆதரவு கிடைத்தால் அனேகமான சபைகளில் தமிழரசுக்கட்சி நிர்வாகம் அமைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கட்சியின்  பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழரசு மற்றும் தமிழ் தேசியப்பேரவையென இரண்டு…

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய…

வடக்கு மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு

வடக்கு பாடசாலை மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் தெரிவித்துள்ளார்.  உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு…

வடக்கில் போதை பாவனைக்கு சிறுமிகளும் அடிமை

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு சிறுமிகளும் அடிமையாகியுள்ளதாக வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  நீதிமன்றினால் 15…

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை உடன் ஆரம்பிக்க பணிப்பு

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. …

யாழ். பல்கலையில் பொன்.சிவகுமாரனுக்கு அஞ்சலி

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலை கழக வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்வில் ,  பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட…

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச கண்காணிப்பு தேவை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது  வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி வரவேற்பு வளைவுக்கு அருகாக இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  தமிழர் தாயகத்தில் காலத்துக்குக் காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள்…

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில்,  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் புதன்கிழமை சிறிய என்புத்தொகுதியொன்று…

ஒருபுறம் கதிரை பேரம்:மறுபுறம் வழக்கு!

வடகிழக்கில் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்ற இலங்கை தமிழரசுக்கட்சி தேசிய மக்கள் சக்தியுடன் பேச்சுக்களை திரைமறைவில் முன்னெடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.யாழ்.மாநகரசபையின் முதல்வர் பதவியை தேசிய மக்கள் சக்திக்கு விட்டுத்தருமிடத்து பதிலிற்கு ஏனைய சபைகளில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி தமிழரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை தொடர்பான எம்.ஏ.சுமந்திரனின் வழக்கு…