Category யாழ்ப்பாணம்

நாங்கள் ஒளித்து ஓடி சந்திக்கவில்லை

நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு எங்களுடைய கட்சியின் அரசியல்…

45 நாட்கள் தொடர்ந்து அகழ்வு!

செம்மணி மனிதப் புதைகுழியினை மேலும் 45 நாட்கள் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ள  யாழ் நீதிவான் நீதிமன்றம் கட்டளையை ஆக்கியுள்ளது. நாளையுடன் ஆரம்ப ஆய்வு நிறைவுபெறுகின்றது, மேலும் 45 நாட்கள் அகழ்வு தொடர்ந்து மேற்கொள்வதற்கு நீதி அமைச்சிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு திட்ட பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை வழங்கப்டுள்ளது . இந்த வழக்கில்…

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் – மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.  செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும்…

சிந்துபாத்தியிலும் மேலுமொரு பாரிய புதைகுழி?

யாழ்ப்பாணம், செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு இருகாக மேலுமொரு பாரிய மனித புதைகுழி இருக்கலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் தொடர்ச்சியாகவே அத்தகைய சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று வியாழக்கிழமை வரை 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன. புதைகுழியில் இரண்டாம் கட்டமாக நேற்றும் அகழ்வுப்…

10ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்களவர்களை அழைத்து வர திட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.  எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை…

யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக மகேசன் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த மார்ச் மாதம் முதல் செயற்படும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களில் கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவி வறிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது…

தமிழரசு கட்சியும் எமது கூட்டுக்குள் வர வேண்டும்

தமிழரசு கட்சி ஈபிடிபியுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டதை மூடி மறைப்பதற்காகவே எமது தரப்பில் ஒரு சிலர் ஈபிடிபியுடன் பேசவுள்ளதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டதாக   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,…

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில்இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்…

செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட…