Category யாழ்ப்பாணம்

சைக்கிள் :திருத்தங்கள் அவசியம்!

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை முன்னெடுத்த நகர்வுகள் ஒரு சாராரிடம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கருணா, பிள்ளையான், டக்ளஸ் போன்ற தமிழினத் துரோகிகளோடு பேச்சு என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது. அவ்வாறு பேசினால் பேசுபவர்கள் எம்மோடு இருக்க முடியாதென கொந்தளித்துள்ளார் சுகாஸ் கனகரட்ணம்.விடுதலைப்போரில் 50,000 பேரும் வெடித்துச்…

யாழில் தாக்குதல் அச்சத்தில் காவல்துறை!

பொன்னாலை கடற்பரப்பில் இலங்கை கடற்படை ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை பகுதியில் உள்ள பத்து காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். காங்கேசன்துறை பொலிஸ் நிலையான தொலைபேசியில் நபரொருவர் காங்கேசன்துறை பகுதியில் உள்ள…

கஞ்சாவால் குவியும் யாழ்ப்பாணம்?

கஞ்சாவால் குவியும் யாழ்ப்பாணம்? பொன்னாலை காட்டுப்பகுதியூடாக கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு 240 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  அத்துடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இன்று சனிக்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றது.  கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் பொன்னாலை இளைஞர்கள் இதேபோன்ற கஞ்சா கடத்தல் ஒன்றை  முறியடித்து…

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட – துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். சாவக்கச்சேரியில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,  ‘நாடு…

கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – மாற்று திறனாளிகள் கவலை

மாற்று திறனாளிகளின் கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என கருவி நிறுவனத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.  யாழ், ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.  மேலும் தெரிவிக்கையில்,  மாற்றுத் திறனாளிகளான நாம் ஏனைய பிரஜைகள் போன்று, இந்நாட்டின் பிரஜைகளே  சகலதும் பெற்று உறுதியாக வாழ வேண்டும். ஆனால் எமது நட்டில் அத்தகைய ஒரு நிலையான…

பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபர நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியவில்லை

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொள்வதற்காக முற்பணத்தை வழங்கிய போதும் இதுவரை எமது வியாபார நடவடிக்கை ஆரம்பிக்க முடியவில்லை என கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை இன்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் , இராமலிங்கம் சந்திரசேகரர் , வடமாகாண ஆளுநர் நா.…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்

கடும் காற்றுடன் கூடிய கால நிலை காரணமாக நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையில் இடம்பெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும்,…

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் 25ஆம் திகதி யாழுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இதன் ஒரு…

அஸ்வெசும பணத்தில் 385,000 ரூபாயை மோசடி செய்த குற்றத்தில் பெண் அதிகாரி கைது

ஆதீரா Saturday, June 14, 2025 யாழ்ப்பாணம் அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்ட நபர் கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி ஆவார்.  சந்தேக நபர் முப்பத்தைந்து இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் அஸ்வெசும…

யாழில். வாள் வெட்டு தாக்குதல் – இளைஞன் உயிரிழப்பு

யாழில். வாள் வெட்டு தாக்குதல் – இளைஞன் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு…