Category முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி: நால்வர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.  சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  கைதானவர்கள் மன்னாகண்டல், 10 ஆம் வட்டாரம், தேவிபுரம், சுதந்திரபுரம் , உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் ஆகிய பிரதேசங்களை…

மகளிர் தினத்தில் போராட்டம்!

வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களதுகுடுபங்களிற்கு நீதி கோரி மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன.  கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த நாள் முதல் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தாம் 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இந்த…

இலக்கத்தகடுகளை அடையாளங்காண அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது  அந்த வகையில் கடந்த 27 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு…

விகாரைகளின் கீழ் புதைகுழிகளா?

காங்கேசன்துறை தையிட்டி விகாரையில் பாரிய மனித புதைகுழியினை மறைக்கவே விகாரை அமைக்கப்பட்டுள்ள்தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைதீவிலும் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். “கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது…

உந்துருளியில் கசிப்பு விற்பனை: இளைஞர்கள் இருவர் கைது!

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் உந்துருளியில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.  முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு முன்பாக…

முல்லைத்தீவு வற்றாப்பளையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த சிறுவனின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து சிறுவன் ஒருவன் இன்று புதன்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த சிறுவன் நேற்று செவ்வாய்க்கிழமை (25) காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார். தேடுதல் நடவடிக்கையின் போது நீர் நிலை…

உள்ளுரில் 17 பேர் கைது?

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி நந்திக்கடல்,முல்லைத்தீவு, ஆனவாசல்,சின்னபாடு மற்றும் கட்டைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்ளுர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும்…

வட்டுவாகல் பாலம் நிர்மாணிக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025 ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந் நிலையில் தமது அயராத தொடர்…

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு

கூழாமுறிப்பு “வி” காட்டுப்பகுதியில் தேக்கு மரம் வெட்டப்பட்டு, அதன் குற்றிகளை கடத்தத் தயாராக இருந்த கெப் வாகன சாரதி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு –  ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு “வி” காட்டுப்பகுதியில் மரக்குற்றிகளை கடத்தும் முயற்சி இடம்பெறுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.  அதனையடுத்து இன்று…