Category முல்லைத்தீவு

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. Related Posts முல்லைத்தீவு Post a Comment No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை   இலங்கையில் உள்ளூராட்சி மன்றத்…

கரைச்சி ,பூநகரி , கரைதுறைப்பற்று பெரும்பான்மை!

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசசபைகளும் முல்லைதீவின் கரைதுறைப்பற்று பிரதேசசபையும் மட்டுமே போதிய பெரும்பான்மையின் கீழ் ஆட்சியை அமைக்க தயாராகின்றன.ஏனைய சபைகளில் இழுபறி தொடர்கின்றது.இதனிடையே  புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளாட்சி நிறுவனங்களில் பெரும்பான்மையாக வெற்றி…

குருந்தூர் மலை அடிவாரத்தில் விவசாயம் செய்ய நிலத்தை உழுதவர்கள் கைது

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிர்ச்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது கல்கமுவ சந்தபோதி தேரரின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு பொலிசார் மூவரை நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையம்…

சுற்றுலாவை வடக்கில் மேம்படுத்த ரவிகரன் கோரிக்கை

 வடக்கில் ஒவ்வொரு மாவட்டச்செயலகங்களிலும் பிரத்தியேகமாக சுற்றுலா அலகுகளை நிறுவ நடவடிக்கை எடுப்பதுடன் அதற்குரிய ஆளணிவளங்களையும் வழங்கி வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரைந்து மேம்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.  தற்போது சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானத்திலேயும் இலங்கை முழுவதும் தங்கியுள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வருகைதருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட…

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி: மூன்று விவசாயிகள் கைது!

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். …

முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு முல்லைத்தீவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, கள்ளியடி வயல்வெளி பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.  புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அருமைநாயகம் யசோதரன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

முள்ளிவாய்க்கால் தங்கம் கடைசியில் யாருக்கு?

இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட தமிழ் மக்களது நகைகளை மீள தமிழ் மக்களிடமே கையளிக்கவேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 இல் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி காலக்கட்டத்தில் விடுதலைப்…

வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருத்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்தவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.  கடந்த 20 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை கூரையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு…

கடற்தொழில் அமைச்சரின் அடவாடிகளை அனுமதிக்க முடியாது – ரவிகரன் எம்.பி சீற்றம் 

கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட மீனவ சங்க தலைவரை நேரடியாக சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அடாவடித்தனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் கடந்த 24ஆம் திகதி தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கேப்பாப்புலவு…

ஈஸ்டர்: பாதுகாப்பு மும்முரம்!

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஸ்டானங்களை நடத்தும் வடகிழக்கிலுள்ள தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி வழிபாடுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத வழிபாடுகளும் தேவாலயங்களில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதிக…