Category முல்லைத்தீவு

குருந்தூர் மலை விவசாயிகள் வீடுகளிற்கு!

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட   விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று கட்டளையாக்கியுள்ளது. நீதிபதி ரீ. பிரதீபன் அவர்கள் தனது கட்டளையில், சந்தேகநபர்கள் மீது வழக்கை தொடர்ந்து நடாத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை…

பரிதாப மரணங்கள்:ஒரே நாளில் நால்வர் மரணம்!

முல்லைத்தீவில் இன்று மாத்திரம் இரு வெவ்வேறு சம்பங்களில் நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில்இரு பெரும் பரிதாப மரணங்கள் பதிவாகியுள்ளது முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தாமரை பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவரும் அவரோடு சென்ற ஒன்று விட்ட சகோதரனான சிறுவன் ஒருவனுமாக இருவர் உயிரிழந்திருந்தனர். இதேவேளை முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில்…

ஒட்டுசுட்டான் பாடசாலையில் தேன் கூடு கலைந்ததில் மாணவர்களை குத்திய தேனீக்கள்

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேனீக்கள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63 பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டடம் ஒன்றில் தேன் கூடுஇருந்துள்ளது.  இந்நிலையில் இன்றைய தினம்  வலயமட்ட விளையாட்டு போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகிய இந்நிலையில்…

கொக்குத்தொடுவாய் -அறிக்கை நீதிமன்றில்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளது என நம்பப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான சட்ட வைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்று முழுதான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கொக்குளாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.…

குருந்தூர்:தமிழ் விவசாயிகளிற்கு தொடர்ந்து சிறை!

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு தமிழ் விவசாயிகளையும்    தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார். குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் காணியின் உரிமையாளர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கடந்த 10ஆம் திகதி  குருந்தூர் மலை பகுதியில் இரு விவசாயிகள் உதவியுடன்;…

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக  புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.  சடலமாக மீட்கப்பட்டவர்  புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பின்னர் குறித்த…

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி…

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.  எங்கள் பெருமை மிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள…

கடற்படையின் சிறப்பு நடவடிக்கை – 38 கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கொக்கிளாய், சேப்பல் தீவு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே…

ஒருவாரத்தினுள் தகவல் வழங்க கோரிக்கை!

வடமாகாணத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கரைச்சி ,பூநகரி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைகளே தனித்து பெரும்பான்மையுடன் தமிழரசுக்கட்சி ஆட்சியமைக்கும் சபைகளாக தெரிவாகியுள்ளன. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில்…