Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரஷ்யாவிற்கு எதிரான போரில் நேட்டோ படைகளின் அதிகாரப்பூர்வ ஈடுபாடாக உக்ரைனில் ஐரோப்பிய அமைதி காக்கும் படையினரின் இருப்பை மாஸ்கோ பார்க்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். சமரசம் செய்வதற்கு எந்த இடமும் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். இந்த விவாதம் வெளிப்படையான விரோத நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்று லாவ்ரோவ் வியாழக்கிழமை கூறினார்.…
ஐரோப்பாவை பிரெஞ்சு அணுசக்தி குடையின் கீழ் வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மக்ரோன் கூறுகிறார். பிரான்சின் அணுசக்தி குடையின் கீழ் நட்பு ஐரோப்பிய நாடுகளை வைப்பது குறித்து பாரிஸ் பரிசீலிக்கலாம் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். வருங்கால யேர்மன் அதிபரின் வரலாற்று சிறப்புமிக்க அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய கண்டத்தில் நமது…
தென் கொரியாவில் இராணுவப் பயிற்சியின் போது பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது ஒரு போர் விமானத்திலிருந்து எட்டு குண்டுகள் தற்செயலாக வீசப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். போச்சியோனின் பொதுமக்கள் பகுதியில் குண்டுகள் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் ஒரு பொதுமக்கள் வசிக்கும் போச்சியோன் பகுதியில நேரடி துப்பாக்கிச் சூடு இராணுவப் பயிற்சியின் போது…
10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஎச்டி மாணவர் குற்றவாளி என பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பிஎச்டி படிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர், 10 பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புதன்கிழமை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2023 இல் ஒரு பெண் தன்னை பாலியல் பலாத்காரம்…
தவறுகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் சட்டங்களை உருவாக்கத் தவறியதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் யேர்மனி மற்றும் நான்கு நாடுகளுக்கு அபராதம் விதித்துள்ளது. யேர்மனிக்கு தகவல் தெரிவிப்பவர்களை போதுமான அளவு பாதுகாக்கத் தவறியதற்காக €34 மில்லியன் ($36.7 மில்லியன்) அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விதித்தது. இந்த வழக்கு 2023 ஆம்…
180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட காபூல் அபே கேட் தற்கொலை குண்டுவெடிப்பைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதி (முகமது ஷரிபுல்லா) கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இரண்டாவது முறையாக ஓவல் அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் காங்கிரசில் தனது முதல் உரையின் போது டிரம்ப் இந்தக்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த…
யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான “டெய்சி ஆச்சி” என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட், இன்று புதன்கிழமை (05) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்படி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான “டெய்சி…
உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை இடைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த ஒரு சில மணிநேரத்தின் பின்னர் உக்ரைன் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறுகிறார். ரஷ்யாவுடன் நீடித்த அமைதிக்கான தேடலில் உக்ரைன் முடிந்தவரை விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஜெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில்…
கடந்த வாரம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஓவல் அலுவலகத்தில் நடந்த சூடான வாக்குவாதத்திற்குப் பிறகு, உக்ரைனுக்கு அமெரிக்க இராணுவ உதவிகளை அனுப்புவதை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சின்.என்.என் இடம் தெரிவித்தார். டிரம்ப் வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்திய பின்னர்…