Category முதன்மைச் செய்திகள்

மட்டக்களப்பில் சஜித்:யாழில் டக்ளஸ்:முட்டுக்கொடுப்பு!

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக ஜக்கிய மக்கள் சக்தி ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஊடகவியலாளரான சிவம் பாக்கியநாதன்    தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன்  வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால்…

விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து! தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு…

இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ் தேசியத் தளத்தின் அரண் – சிறீதரன்

இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ் தேசியத் தளத்தின் அரணாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின்…

யேர்மன் ஜெனரல் நேட்டோவின் கூட்டுப் படைக் கட்டளையின் புதிய தளபதியாகிறார்!

இன்று  புதன்கிழமை முதல், யேர்மன் விமானப்படை ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ் நேட்டோவின் கிழக்குப் பகுதியின் செயல்பாட்டுப் பாதுகாப்பை பொறுப்பேற்று மேற்பார்வையிடுவார்.  59 வயதான இவர், நெதர்லாந்தின் பிரன்சுமில் உள்ள  நேட்டோ தலைமையகமான நேச நாட்டு கூட்டுப் படை கட்டளையின் கட்டளைப் பொறுப்பை இத்தாலிய ஜெனரல் குக்லீல்மோ லூய்கி மிக்லியெட்டாவிடமிருந்து இன்று புதன்கிழமை நண்பகலில் பொறுப்பேற்பார். உக்ரைன்…

ஆஸ்திரியா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி!

ஆஸ்திரியா கிராஸ் நகர பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளுக்குப் பின்னர் பள்ளியிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என ஆஸ்திரிய காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு காவல்துறையின் இந்த நடவடிக்கை தொடங்கியது.  ஏனையவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்…

உக்ரைனில் இரண்டாவது அலைத் தாக்குதல்: நிலக்கீழ் அறைகளில் மக்கள்!

300க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள் கீவ் மற்றும் ஒடேசாவைத் தாக்கியதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 315 ட்ரோன்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளை ஏவியது , இது போர் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாகும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி…

கேரளா அருகே பற்றி எரியும் சிங்கப்பூர்க் கப்பல்! பணியாளர்கள் கடலில் குதித்தனர்!

தென்னிந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து சுமார் 144 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான வான் ஹை 503 இல் இருந்து பணியாளர்களை மீட்பதற்காக இந்திய கடலோர காவல்படை நான்கு கப்பல்களை அனுப்பியது. திங்கட்கிழமை காலை கப்பலில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து தீ விபத்து…

காசாவை அடைய முயன்ற உதவி கப்பலை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது

சுவீடன் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உடன் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகு , பாலஸ்தீனப் பகுதியின் கடற்கரையை நெருங்கிக்கொண்டிருந்தபோது,  ​​இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. காசா பகுதிக்கு மிகவும் தேவையான மனிதாபிமானப் பொருட்களை அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது. அங்கு முழு மக்களும் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.…

தன்னிலை மறந்து தன்நாமம் கெட்டு மாற்றான் வீட்டுப் படியேறும் காலம்! பனங்காட்டான்

2017ல் அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுனர் கூரேயிடம் கையளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது அவ்விடத்தில் வைத்து திடுதிப்பென சுமந்திரனின் ஆதரவு உறுப்பினர்களால் தமது கைக்குள் திணிக்கப்பட்டதாக கூறியிருந்தார். இப்போது, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கதிரைப் பிச்சை கேட்டு தன்னந்தனியாகச் சென்று சந்திப்பதற்கு உருவான நிலைமையும் முன்னரைப் போன்று திடுதிப்பென திணிக்கப்பட்டதா? …

பற்றி எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோதல்: தேசிய காவல்படையை அனுப்புகிறார் டிரம்ப்!

குடியேற்ற சோதனைகள் தொடர்பாக போராட்டங்கள் அதிகரித்து வருவதால், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு மாநில தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்ப டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. கூட்டாட்சி சட்ட அமலாக்கத்தை ஆதரிக்க, செயலில் உள்ள கடற்படையினரை லாஸ் ஏஞ்சல்ஸ்ஸுக்கு அனுப்ப பென்டகன் தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரிக்கிறார். இந்த வாரம் லாஸ்…