Category முதன்மைச் செய்திகள்

பிரித்தானியா சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியா சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். 17 திகதி மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர்  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

கத்தாரில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை இஸ்ரேலும் ஹமாஸும் உறுதிப்படுத்தின.

சர்வதேச அளவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தனது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ள நிலையில், கட்டாரில் புதிய சுற்று காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலும் ஹமாஸும் உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை ஒரு…

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 153 பேரின் உடல்கள்  காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் மேலும் 459 பேர் காயமடைந்ததாகவும் முற்றுகைக்குள் உள்ள  காசாப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் முந்தைய நாட்களில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட ஏழு பேரும் அடங்கும்…

காசாவைக் கைப்பற்றப் பெரும் தாக்குதல்களைத் தொடங்குகிறது இஸ்ரேல்

ஹமாஸை தோற்கடித்து, காசாவில் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதன் ஹீப்ரு எக்ஸ் கணக்கில், அந்தப் பகுதியின் மூலோபாயப் பகுதிகளை கைப்பற்ற ”ஆபரேஷன் கிதியோன் ரதங்கள்” துருப்புக்களை அணிதிரட்டியதாகக் கூறியது. “கிதியோன் ரதங்கள்” – ஒரு பைபிள் போர்வீரனைக் குறிக்கும்.…

ஒரு புறம் பேச்சுவார்த்தை: மறுபுறம் தாக்குதல்!

துருக்கியில் ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடத்துகொண்டிருக்க மறுபுறம் உக்ரைனில் வடகிழக்கு உக்ரைன் பிராந்தியமான சுமியில் ஒரு ரஷ்ய ட்ரோன் ஒரு சிற்றுந்து மீது மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். துருக்கி இஸ்தான்புல் நகரில் ரஷ்யாவும் உக்ரைனும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் நேரடி அமைதிப்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான…

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது,…

காலதாமதத்திற்குப் பின்னர் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது!

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை காலதாமதத்திற்குப் பின்னர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தொடங்கியது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் கீழ் மட்டக் பேச்சுவார்த்தைக் குழுக்களுடன் நடைபெற்று வருகின்றன.  அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  உக்ரைன் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை நாடுகிறது.  உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்யா மோதலின் மூல காரணங்களை…

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக் கலந்துரையாடல்: மக்கள் எதிர்ப்பு!

மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவுப் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை சௌத்பார் மன்னார் பகுதியில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த…

திருகோணமலை குச்சவெளி வேலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய நிழக்வாக மாறியுள்ளன. அந்தநிலையில், 2025 மே 16ஆம் திகதி, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.…