Category முதன்மைச் செய்திகள்

யாழில். கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு

கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு “நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி…

ஜே.ஆர். அன்று சுமத்திய குற்றச்சாட்டை ஜே.வி.பி. இன்று ஏற்றுக்கொண்டுள்ளதா? பனங்காட்டான்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளை போர் வெற்றி நாளாக மகிந்த அரசு கொண்டாடியதற்கும்இ 1983 கறுப்பு யூலை தமிழின அழிப்பு நாளை ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி அரசு நட்புறவு நாளாக கொண்டாடுவதிலும் என்ன வித்தியாசம்? குசினியிலிருந்து குத்தாட்டம்வரை, வரி வசூலிலிருந்து வான்வழிப் பயணம் வரையான அனைத்துமே இன்று அரசியலாகி விட்டது என்று ஐரோப்பிய நாட்டு…

இனியபாரதியின் இரண்டாவது சகாவான தொப்பிமனாப் கைது!

இனிய பாரதியின் சககாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட தமிழ் பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) கட்சியின் இயங்கி வந்த முகாங்கள் மற்றும் மயானங்களை  இரண்டு தினங்களாக…

கிறீசில் காட்டுத் தீ: தலைநகர் அருகே குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

கிரீஸ் நாடு முழுவதும் ஐந்து பெரிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது. தலைநகர் ஏதென்ஸிலிருந்து வடக்கே 30 கிமீ  தொலைவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். பரவி வரும் தீயை அணைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை கிரீஸ் கோரியுள்ளது.  எரியும் புகையின் மணம் மத்திய ஏதென்ஸ் வரை பரவியது. கடுமையான வெப்ப…

அமெரிக்காவில் கத்திக்குத்து: 11 பேர் காயம்!

அமொிக்காவின் மிச்சிகனில் உள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் நடந்த கத்திக்குத்தில் குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிராவர்ஸ் நகரில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அருகிலுள்ள மருத்துவமனை ஒன்று 11 பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறியது.  மூன்று பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக உள்ளூர்…

இந்தியாவில் ஹரித்வார் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலிட: மேலும் பலர் காயம்!

வட இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான இந்து கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உத்தரகண்ட் மாநிலத்தின் வடக்கு நகரமான ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் இந்த சம்பவம் நடந்தது. இது நாட்டின் தலைநகரான புது தில்லியில் இருந்து சுமார் 5 மணி நேர…

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை தேவை: தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் முன்னெடுப்பு!

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும்   இடம்பெற்றுள்ளது. திருகோணமலை வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள்…

கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரே செம்மணி புதைகுழிக்குள் – கஜேந்திரன்

செம்மணியில் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் வெளி வந்திருக்கின்றன. இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டவர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு…

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம்,…

காசா பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு

கத்தாரின் தோஹாவில் நடைபெறும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார்.  ஹமாஸ் சுயநல நிலைப்பாட்டை எடுப்பதாக விட்காஃப் குற்றம் சாட்டினார். அக்டோபர் 7, 2023 தாக்குதலில் பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களைத் தொடர்ந்து பணயக்கைதிகளாக ஹமாஸ் வைத்திருக்கிறது.   மத்தியஸ்தர்கள் பெரும் முயற்சியை மேற்கொண்டிருந்தாலும், ஹமாஸ் ஒருங்கிணைக்கப்பட்டதாகவோ அல்லது…