Category மன்னார்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக தமிழ் நேசன் அடிகளார் நியமனம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார். மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. ஒரு மறைமாவட்டத்தில்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கியது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு   வடகிழக்கெங்கும் கூட்டாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் போட்டியிட  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  செலுத்தியுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளரும், ரெலோ கட்சியின்…

நேற்று அமைச்சர் எச்சரிக்கை:இன்று கைது!

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால்…

மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு

மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு தலைமன்னாரில் இருந்துஅகதிகளாக நால்வர் புறப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.  கடலில் தத்தளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை…

மக்கள் கிலேசம் அடைய தேவையில்லை?

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல், பொருளாதாரம் பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இது மக்களுக்கான அரசாங்கம். எனவே மன்னார் மக்கள் கிலேசம் அடைய தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் பகுதியில்  கனிய மணல் ஆய்வு இடம்பெற வருகை தந்த குழு…

ஒரே நாளில் மன்னார்-நெடுந்தீவில் கைதுகள்!

இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வகையில் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது…

மன்னார்:கனியாத இலவம் பழம்!

மன்னார் தீவில் கனிய வள அகழ்விறகான ஆய்வு மீண்டும் மக்கள் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல்  ஆய்வு அறிக்கையை வழங்க மன்னார்  கொன்னையன் குடியிருப்பு பகுதிக்கு கடந்த  இரண்டு தடவைகள் வருகை தந்து…

தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியது – செல்வம்

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில்…