Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…
சர்ச்சைக்குரிய அதானியின் காற்றாலைக்கான அனுமதி சத்தம் சந்தடியின்றி மீள வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை புதன்கிழமை (11) மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெறவுள்ளது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை…
மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் மன்னார் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை(8) கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சட்ட விரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும்…
மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா, பட்டித்தோட்டத்தை சேர்ந்த வேனுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்மந்தப்பட்ட…
மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை மற்றும், இவற்றால் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலமையைக் கருத்திற்கொண்டு வடமாகாணசுகாதார அமைச்சின்கீழ் காணப்படும் குறித்த மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்தியஅரசின் கீழ் கொண்டுவருவதற்கு கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வடமாகாணசபையின் கீழ் காணப்படும் மன்னார் மாவட்ட…
துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை அதிகாரி சடலமாக மீட்பு மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது குறித்த அதிகாரி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த…
தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினரால் காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை…
மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவுப் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை சௌத்பார் மன்னார் பகுதியில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த…
மன்னாரில் செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபில்களுடன் இருவர் கைது மன்னார் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று (10) மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 19…
ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம்…