Category மட்டக்களப்பு

பிணை எடுக்க ஆட்களில்லை!

சிறையில் அடைக்கப்பட்டு;ள்ள முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணையில் பொறுப்பேற்க எவருமற்ற நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (௦8)  பிணையில் விடுவிக்கப்பட்டார்.…

மீண்டும் சிறை சென்ற வியாழேந்திரன்

இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, சந்தேக நபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யத் தவறியதால்,…

பிள்ளையான் கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்   கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி தெரிவித்துள்ளது.

வியாழேந்திரனுக்கு பிணை

விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட…

அருண் தம்பிமுத்துக்கு பிணை!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து 3 கோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் விடுவித்துள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03.04.2025) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஆட்பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவரிடம் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட…

கூட்டு இராசியில்லை:சிறை நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின்  விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அரச காணிகளை முறைகேடாக விற்பனை செய்ய இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மட்டக்களப்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு  தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த செல்லத்துரை கெங்காதரன்  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து மட்டக்களப்பு மாமாங்கம்…

கூட்டணியின் முதல் ஆடு:வியாழேந்திரன் உள்ளே!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முன்னதாக மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

வியாழேந்திரன் கைது: ஏப்பிரல் முதலாம் நாள் வரை விளக்கமறியல்!

வியாழேந்திரன் கைது: ஏப்பிரல் முதலாம் நாள் வரை விளக்கமறியல்! கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இன்று செவ்வாய்க்கிழமை (25) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே,…

கதிரை கனவு:பிள்ளையான்-கருணா-வியாழேந்திரன் கூட்டு!

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை கைச்சாத்திட்டனர். நாடாளுமன்ற தேர்தல் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும்…