Category மட்டக்களப்பு

பிள்ளையான் விடுதலையா?

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை பெரும் பேசுபொருளாக இருந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது விவகாரம் எந்த வித தீர்வுகளுமின்றி கிடப்பில் போடப்பட்டள்ளது. முன்னதாக பிள்ளையான் கைது விவகாரம் அதிர்வலைகளை கிளப்பியிருந்த நிலையில் பின்னர் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக மாறிவருகின்றது.  முன்னதாக  மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில்…

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று (22) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  கடந்த செவ்வாய்க்கிழமை (20) மந்திரியாறு நீரோடை பகுதியில் இந்த நபர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே முதலையால்  இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இந்த நபரை கடந்த இரு நாட்களாக…

மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிழக்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்தது.  வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி…

மட்டக்களப்பு வாகரையில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள்

மட்டக்களப்பு வாகரையில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் மட்டக்களப்பு வாகரையில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றன. இந்நிகழ்வி்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Related Posts மட்டக்களப்பு Post a…

மட்டு. கல்லடி வாவியில் கரை ஒதுங்கிய இன அழிப்பு நினைவு தூபி

மட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படம் , கறுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தூபி ஒன்று சனிக்கிழமை (17) இரவு மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாவி ஊடாக சம்பவதினமான சனிக்கிழமை இரவு…

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.  நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக இரவு சென்றவர் காலை வரையில் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற…

விமர்சித்தவர்களிற்கு கண்டம்?

ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் கோத்தபாயவின் அச்சுறுத்தலையடுத்து பிள்ளையானை வழக்கிலிருந்து விடுவித்ததான குற்றச்சாட்டு விவகாரம் சூடுபிடித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு அவதூறு விளைவிக்கும் முகமாக முகநூல் உள்ளிட்ட சில…

பிள்ளையானிற்கு எப்படி கிடைத்தன ஆயுதங்கள்?

பிள்ளையானின் அதி நவீன ஒரு தொகுதி ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும் ஒருவர் தானாகவே சென்று காட்டிக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.  பிள்ளை யானின் அலுவலத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த…

தம் உயிரை தியாகமாக ஈந்த அன்னைக்கு எங்களது வீர வணக்கம்

ஒரு தாய் பெரிய அரச இயந்திரத்திற்கு எதிராக படைத் தளத்திற்கு எதிராக துணிந்து தன்னந்தனியாக நிராயுதபாணியாக நின்று தனது மன வலிமையை மட்டும் வெளிப்படுத்தி மக்களிற்காக இந்த தியாகத்தைச் செய்திருக்கின்றார் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்…

சிறைச்சாலை அதிகாரிகள் கைதாவார்களா?

பிள்ளையானின் அரசியல் ஆலோசகரான ஸ்டாலின் ஜானம் என்பவரின் மனைவியின் சகோதரரும் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனுக்கும் பிள்ளையானின் ஈஸ்டர் தாக்குதலுக்கும் பல தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை மற்றொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் நவநீதன் வெளிப்படுத்த முன்வந்துள்ளார். பிள்ளையான் யார் யாரை காட்டிக்கொடுக்கப்போகின்றார் என்பது தெற்கிலும் கிழக்கிலும் பேசப்படுகின்ற பரபரப்பான விடயமாகவுள்ளது. நல்லாட்சி காலத்தில் 2015ஒக்டோபர்…