Category திருகோணமலை

9 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை: திருமலை புல்மோட்டையில் போராட்டம்!

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை (07) காலை நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், நியமனத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறுவனத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் கடந்த வருடம் சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட குறித்த ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடமையாற்றும்…

மூதூரில் பேருந்தும் பாரவூர்தியும் மோதிய விபத்தில் 33 பேர் காயமடைந்தனர்

மினுவங்கொடையிலிருந்து சேருவில நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, மூதூரில் பாரவூர்தியுடன் மோதியதில் 18 பெண்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையைச் சேர்ந்த பக்தர்கள் சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. விபத்துக்குள்ளனது.

வீதியைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் போராட்டம்

வெருகல் முகத்துவாரம் – சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று சனிக்கிழமை (01) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 400 மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதியானது பள்ளமும், குழியுமாக காணப்படுவதோடு இவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரிகளுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இந்நிலையிலேயே…

நான்கு-வலம்புரிச்-சங்குகளுடன்-திருகோமலையில்-மூவர்-கைது

நான்கு வலம்புரிச் சங்குகளுடன் திருகோமலையில் மூவர் கைது

திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள்  செவ்வாய்க்கிழமை  (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.  சந்தேக நபர்கள் மூவரும் குறித்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்கு முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் . வவுனியா பகுதியைச் சேர்ந்த…