Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
2017ல் அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுனர் கூரேயிடம் கையளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது அவ்விடத்தில் வைத்து திடுதிப்பென சுமந்திரனின் ஆதரவு உறுப்பினர்களால் தமது கைக்குள் திணிக்கப்பட்டதாக கூறியிருந்தார். இப்போது, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கதிரைப் பிச்சை கேட்டு தன்னந்தனியாகச் சென்று சந்திப்பதற்கு உருவான நிலைமையும் முன்னரைப் போன்று திடுதிப்பென திணிக்கப்பட்டதா? …
காணி விவகாரத்தில் தமிழரசுக் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் அதனையே காரணம்கூறி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வர்த்தமானியை ரத்துச் செய்ய முடியாதென்று கூறும் வாய்ப்பு அநுர குமரவின் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கும். தமிழரசுக் கட்சி மீதான வழக்குகள் அதன் நிர்வாகத் தெரிவுகளை முடக்கி வைத்திருப்பதை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். தமிழர் தேசிய பரப்பில் கடந்த…
இங்குள்ள பெயர்ப் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கிறதா? கணவரின் பெயர் இருக்கிறதா? தந்தையின் பெயர் இருக்கிறதா என்பதை பலரும் விரல் விட்டுத் தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மட்டுமா இந்த நிலை? வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகளை, தனது கணவரை இழந்தோர் அவர்களின் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து கேள்வி…
இலங்கையில் இரண்டு தடவை பயங்கரவாதம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து, இரண்டு தடவைகளும் தடைசெய்யப்பட்டு, சிங்கள அரசியல் கட்சிகளின் சீர்கேட்டினால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி தனது திட்டம் என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இவைகள் முழுமையாக செயற்படுத்தப்படுமானால் இந்து சமுத்திரத்தின் குட்டித்தீவு தேர்தல்களற்ற,…
2018ல் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. முதன்முதலாக நடத்திய மே தின ஊர்வலத்தின் முன்வரிசையில் செஞ்சட்டையுடன் சென்றவரும்இ 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்களவரான சஜித் பிரேமதாசக்கு வாக்குச் சேகரிக்கும் பிரதான முகவராக செயற்பட்டவருமான சுமந்திரன்இ உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்? தமிழ்த் தேசியத்துக்கான…
2018ல் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. முதன்முதலாக நடத்திய மே தின ஊர்வலத்தின் முன்வரிசையில் செஞ்சட்டையுடன் சென்றவரும், 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்களவரான சஜித் பிரேமதாசக்கு வாக்குச் சேகரிக்கும் பிரதான முகவராக செயற்பட்டவருமான சுமந்திரன், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்? தமிழ்த் தேசியத்துக்கான…
தென்னிலங்கையின் மூத்த அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திர கட்சியும் எவ்வாறு அவர்களது மக்களாலேயே ஒதுக்கப்பட்டனவோ அதே நிலைமை 75 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு வந்துவிடக்கூடும் போல் தெரிகிறது. தெற்கின் வரலாற்றை இவர்கள் ஒரு பாடமாக எப்போது எடுத்துக் கொள்வர்? இலங்கையின் சட்ட மாஅதிபர் திணைக்களமும் நீதிமன்றமும் எடுத்த முடிவுகளின்…
வெற்றி பெறுவதற்குச் சாதகமாக தேர்தலுக்கு முன்னர் கூட்டுச் சேர்ந்து சகல சபைகளையும் இலகுவாக கைப்பற்றுவதைத் தவிர்த்து, தோல்வி அடைந்த பின்னர் கூட்டுச் சேரலாமென அந்தத் தோல்விக்காக காத்திருப்பதென்பது அறப்படித்த பல்லியின் கதையை நினைவுபடுத்துகிறது. தமிழரசு கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் சுமந்திரனும் சிறீதரனும் எப்போது ஒன்றாக இத்தேர்தல் மேடையில் நின்று வாக்கு கேட்கப் போகிறார்கள்? இன்னும்…
1971லும் 1987லும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட புரட்சியில் தோல்வி கண்டு, தேர்தல்கள் ஊடாக நாடாளுமன்றம் சென்று அமைச்சர் பதவிகளை வகித்தும் வெறுப்புக் கண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று அரியாசனம் ஏறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கும் முன்னாள் அரசியல் தலைமைகள் மீதான விசாரணைகளின் உள்நோக்கம் பல மட்டங்களில்…
குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களை நாடுகடத்தும்போது அவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரையும் கண்காணிப்புக்காக அனுப்புவது மேற்கு நாடுகளின் சட்ட வழமை. இதனைப் புரிந்து கொள்ளாது தம்மை பாதுகாப்புடன் நாட்டுக்கு அனுப்பிய பிரித்தானியா இப்போது குற்றவாளியாகப் பார்க்கிறது என்று கருணா கூறுவது வேடிக்கையான விநோதம். இலங்கையின் உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் வெற்றிக்கான பரப்புரை ஒருபக்கம் இடம்பெற, வேட்புமனுக்கள்…