Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பெருமளவு தமிழ் மக்களது நிலங்கள் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் என்பவை தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களாகும். அதே போன்று தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி…
கோத்தபாய ராஜபக்ச விரட்டப்பட்டு ரணில் ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் தமது விசுவாசிகளிற்கு ராஜபக்சக்கள் பணத்தை அள்ளிவீசியமை அம்பலமாகியே வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லாத தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த 1.2 கிலோ குஷ் கஞ்சாவுடன் இந்தியப் பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இன்று புதன்கிழ (26) அதிகாலை 12.00 மணியளவில் கத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் இயக்கப்படும் CX 611 விமானத்தில் வந்துள்ளார். …
இலங்கையின் சிங்கள சமூக வலை வெளியீட்டாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்களது பணிப்பில் கடந்த காலங்களில் தமிழ் இளைஞர் யுவதிகள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்களை கடத்தி கொலை செய்த பாதாள உலக கும்பலை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அவரின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது நான்கு…
இலங்கையை இன்று அதிரவைத்த புதுக்கடை நீதிமன்ற வளாக படுகொலையாளி கைதாகியுள்ள நிலையில் அவர் இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. கைதானவர் மொஹமட் அஸ்மான் செரிப்தீன் என்ற 34 வயதான நபராவார். இவர் இராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட்டாக இருந்திருந்தததுடன் வடக்கில் நீ;ண்டகாலமாக இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றியவரென தெரியவந்துள்ளது. இன்று காலை பிரபல…
இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார். மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள முன்னைய கோத்தபாய அரசுடன் அதானி குழுமம்…
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானிக்கு ஒதுக்கப்பட்ட காற்றாலை மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டத்தை இலங்கை தனியார் வர்த்தகரிடம் கையளிக்க அனுர அரசு முற்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதைக் குறிப்பிடும் முகமாக, அலகொன்றுக்கு அதானி குழுமத்தால் மதிப்பிடப்பட்ட தொகை நியாயமானதா என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வினவியுள்ளார். இலங்கையை விட்டு அதானி குழுமம்…
இலங்கையை விட்டு வெளியேறுவதாகக் கூறும் முதலீட்டாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு இணங்காத ஒரு கூட்டமே எனவும், அவர்கள் வெளியேறுவது தமக்கு அதிக நெருக்கடி இல்லை எனவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். “1977 முதல் இந்த நாட்டிற்கு என்ன முதலீடுகள் வந்துள்ளன என்பதை அறிய விரும்புகிறோம். …
இலங்கைப்படைகளிலிருந்து தப்பித்து ரஸ்யா உள்ளிட்ட நாடுகளது கூலிப்படைகளில் இணைவோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில் மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகையில், இந்த முடிவு நிர்வாக நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். வெளிநாட்டு பயிற்சி மற்றும்…
ஜெனரல் ஜகத் டயஸ் மிரட்டுகிறார்! தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…