Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க…
முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக இருந்திருந்த அமைச்சர்கள் பலரும் சிறை சென்றுவருகின்றனர். அவ்வகையில் 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் நீண்ட கால சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை விதித்துள்ளது. முன்னாள் விளையாட்டு…
பெரும்பான்மையுள்ள 61 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்கான விபரங்கள் அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிக்கலுக்குரிய 178 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த கட்டத்தில் வெளியிடப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி…
தமிழ் இன அழிப்பு உள்ளிட்ட பதங்களை பயன்படுத்தி கோசங்கள் மற்றும் பதாதைகள் வைக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார…
இன அழிப்பிற்கு நீதி கோரிய தமிழ் மக்கள் போராட்டம் தொடர்கின்ற நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த இலங்கை படையினரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாடாளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை நடைபெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்…
அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். இன அழிப்பு போரின் பின்னரான 16வது தேசிய போர்வீரர் நினைவு விழாவில் உரையாற்றிய அவர், போர் இயற்கையானது அல்ல, ஆனால் அது அதிகாரத்தைப் பெறுவதற்கும், சிலரின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவி;துள்ளார். போர்…
கொழும்பிலும் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை நாள் 2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று…
சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து பதவி நீக்கம் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தோடர்புடைய மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு இன்று (14) நீதியரசர்கள் இருவர் அடங்கிய மேன்முறையீட்டு…
யாழ்.மாநகரசபைக்கான முதல்வராக தமது விசுவாசியான விரிவுரையாளர் கபிலனை கதிரையிலமர்த்த பாடுபடும் தேசிய மக்கள் சக்தி மறுபுறம் கொழும்பு மாநகரசபையில் பிரதி முதல்வர் பதவியை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற சண் குகவரதனுக்கு வழங்க பின்னடித்துவருகின்றது. அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி…
எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன், இலங்கையின் கடன் நிலைத்தன்மை…