Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லையென சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுத்த போராட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று எட்டாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், வடக்கு…
கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்! கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று வியாழக்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி…
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் பேருந்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதலை மேற்கொண்டதில், பேருந்தின் கண்ணடிகள் சேதமடைந்துள்ளன. வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில் வாடகைக்கு பேருந்தினை சேவைக்காக அமர்த்தி அதில் பயணித்து பாடசாலைக்கு…
தேர்தல் தோல்வி அச்சங்காரணமாக எதிர்கட்சிகள் தேர்தல்களை பிற்போ கோருவதாக ஆட்சியாளர்கள் கேலி செய்துவருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது தம்மை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.…
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. போராட்டம் கடந்த 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஓகஸ்ட் மாதம் வேலன் சுவாமிகள், கே.வி.சிவாஜிலிங்கம், மற்றும் வலிந்து…
கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம்…
ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முகமாலைப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் …