Category கிளிநொச்சி

கிளிநொச்சியில் கடும் மழை பல வீடுகளுக்குள் வெள்ளம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது.  அத்தோடு வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர்  சென்றமையால்  மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நகர் புறங்களில் …

தேர்தலுக்கு முன் யாழ் மற்றும் கிளிநொச்சியில் சில காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கேட்ட போது, மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிக உறுதியாக உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிப்போம்.…

கிளிநொச்சியில் டிப்பர் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை – தந்தை செலுத்திய டிப்பர் எமனானது கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. தனது வீட்டில் இருந்த டிப்பர் வாகனத்தை தந்தை செலுத்திய போது அதன் சில்லுக்குள் சிக்குண்டு குழந்தை…

வடக்கிற்கு ஆப்பு:மின்சாரம் வேண்டாமாம்!

இலங்கையின் வடபுலத்திலிருந்து சோலார் மூலமான மீள்புதுப்பிக்கதக்க மின் உற்பத்தியை கட்டுப்படுத்த அனுர அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று  13ஆம் திகதி தொடக்கம்  ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பகல் வேளைகளில்; முற்பகல் 10மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய…

சிறிதரனிற்கு அசைக்க முடியாத நம்பிக்கை?

உள்ளூராட்சி மன்றங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும் அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும்.   அத்தகைய சமூகமயப்பட்ட…

சங்கு தேர்தல் களத்தினுள் உள்ளே!

கரைச்சி பிரதேச சபை உட்பட  ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை மீள…

ஆனையிறவு உப்பிற்கு வந்த சோதனை!

ஆனையிறவு உப்பிற்கு வந்த சோதனை! இலங்கை அரச உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பளத்தின் மேசை உப்பானது இனி “ரஜ சோல்ட்” எனும் வியாபார குறியீட்டின் கீழ் இலங்கை எங்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிங்கள பெயர் சூட்டப்பட்ட பின்னராக அதனை ஆனையிறவு உப்பு எனும் பெயரிலேயே எதிர்காலத்தில் சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே…

பூநகரிக்கும் மே 6- தேர்தல்!

பூநகரி பிரதேச சபை மற்றும்  மன்னார் பிரதேச சபை உள்ளிட்ட மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு, மே மாதம் 6ஆம் திகதியன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பூநகரி பிரதேசசபைக்கு 9 கட்சி மற்றும் குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன. இதனிடையே உள்ளூராட்சித் தேர்தல்…

கிளிநொச்சியில் பெருமளவான பனைகள் அழிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகக் காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காகச் சிலர் பனை மரங்களை அழிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நூற்றுக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டதால் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பனை அபிவிருத்தி அதிகார…

பூநகரி வேட்புமனுக்கள் ஏற்பு?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 336 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இம்மாதம் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள்…