Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளூராட்சி மன்றங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும் அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும். அத்தகைய சமூகமயப்பட்ட…
கரைச்சி பிரதேச சபை உட்பட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை மீள…
ஆனையிறவு உப்பிற்கு வந்த சோதனை! இலங்கை அரச உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பளத்தின் மேசை உப்பானது இனி “ரஜ சோல்ட்” எனும் வியாபார குறியீட்டின் கீழ் இலங்கை எங்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிங்கள பெயர் சூட்டப்பட்ட பின்னராக அதனை ஆனையிறவு உப்பு எனும் பெயரிலேயே எதிர்காலத்தில் சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே…
பூநகரி பிரதேச சபை மற்றும் மன்னார் பிரதேச சபை உள்ளிட்ட மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு, மே மாதம் 6ஆம் திகதியன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பூநகரி பிரதேசசபைக்கு 9 கட்சி மற்றும் குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன. இதனிடையே உள்ளூராட்சித் தேர்தல்…
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகக் காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காகச் சிலர் பனை மரங்களை அழிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நூற்றுக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டதால் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பனை அபிவிருத்தி அதிகார…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 336 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இம்மாதம் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள்…
தேர்தல் நடைபெறாதென முன்னர் அறிவிக்கப்பட்ட பூநகரி மற்றும் மன்னார் பிரதேசசபைகளிற்கான தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 3 பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும்…
மாற்றங்களை கொண்டுவரப்போவதாக சொல்லி வந்த தேசிய மக்கள் சக்தி முன்னைய ஆட்சியாளர்களை போன்றே மலின அரசியலில் களமிறங்கியுள்ளது. உள்ளுராட்சி சபை தேர்தல்களிற்கு வீதி அமைப்பு போன்ற விளம்பரங்களை மலின அரசியலாக தேசிய மக்கள் சக்தியும் கையில் எடுத்துள்ளது. மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்வராயன்கட்டு – வலைப்பாடு…
உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்கள் தெரிவில் தமிழரசுக்கட்சி பாரிய பிளவை சந்தித்துள்ளது.எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு அணி மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆதரவு அணியென பிளவுண்டு கிளிநொச்சி மற்றும் கிழக்கில் தனித்தனி வேடபாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதனிடையே இலங்கை தமிழரசுக்கட்சியை உடைத்து புதிய தமிழரசுக்கட்சியொன்றை உருவாக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக வெளியான செய்தியை அக்கட்சியின் பதில் தலைவர்…
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் தனது கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை மதியம் யாழ்.தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும்…