Category கிளிநொச்சி

கிளிநொச்சி பொலிஸ் சிறைக்கூடத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணியிடை நீக்கம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து, குறித்த பொலிஸ் நிலையத்தின் இரு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்ததாக கூறப்படும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  கிளிநொச்சி பொலிஸாரால்…

இனவழிப்பிற்கு நீதி கோரி வடகிழக்கில் போராட்டம்!

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார்…

வடக்கிலும் காவல்நிலைய மரணங்கள்?

கிளிநொச்சி நகரிலுள்ள இலங்கை காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்றைய தினம்  குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காவல்நிலையத்தின்; விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். தான் அணிந்திருந்த சாரத்தின்…

கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் இருந்து முதியவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் இருந்து முதியவர் சடலமாக மீட்பு கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சியை சேர்ந்த இரத்தினம் ராசு (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்…

பளையில் பொதுமகன் மீது தாக்குதல்!

இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரே தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட…

கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதி உயிரிழந்த குடும்பஸ்தர்

கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதி உயிரிழந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு அஞ்சல் தொடருந்தே குடும்பஸ்தர் மீது மோதியது. இந்த சம்பவத்தில், தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடைய கறுப்பையா ஐங்கரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மதுபோதையில் வீழ்ந்த நிலையில்…

புலிகளின் அரசி ஆலையை மீள இயக்க நடவடிக்கை?

விடுதலைப்புலிகள் காலத்தில் பயன்பாட்டிலிருந்த சேரன் அரிசி ஆலையை மீண்டும் இயங்கச்செய்து தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார். கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுக்குளம் மற்றும் அதை அண்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் குறித்த பகுதிக்குக் களவிஜயம்…

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு ஆபத்து

தமிழரசுக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ. வேழமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதாவது:- கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதியன்று, தாங்களும் இன்னும் மூவரும் மாகாண ஆளுநரை சந்தித்து உரையாடியதாக அறியக்கிடைத்தது. …

செம்மணியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரனைகளை மேற்கொள்ளபடும்

செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார் கிளிநொச்சி கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில்  செம்மணி படுகொலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்…

ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக தனது 52 வயததில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார். கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் கடந்த காலத்தில் பல்வேறு பத்திரிகையில் கடமையாற்றியதோடு 1999 ஆம் ஆண்டு முதல் இறுதி யுத்தக்காலம் வரை புலிகளின் குரல், தமிழீழ வானொலி என்பவற்றில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர். யுத்தக் காலப்பகுதியில் கடுமையான…