Category உலகம்

வர்த்தகப் போர் பேச்சுவார்த்தைகள்: சீனாவும் அமெரிக்காவும் 90 நாட்களுக்கு வரிகளைக் குறைக்க ஒப்ப

வர்த்தகப் போர் பதட்டங்களைக் குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்தத் தயாராகி வரும் நிலையில், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று விதிக்கப்பட்ட கடுமையான வர்த்தக வரிகளில் சிலவற்றை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், திங்கட்கிழமை இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.  இந்த செய்திக்குப் பின்னர்…

காசாப் போர் நிறுத்த நம்பிக்கை: மெரிக்க பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

காசாவில் உயிருடன் இருக்கும் கடைசி அமெரிக்க பணயக்கைதியாகக் கருதப்படும் எடன் அலெக்சாண்டரை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது , அதே நேரத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை அது மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள பாலஸ்தீன போராளிக்குழு, நேற்று ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் அரிதான நேரடிப் பேச்சுவார்த்தைகளை…

இனிமேல் போர் வேண்டாம் புதிய போப் லியோ அழைப்பு

வத்திக்கானில் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை ஆசீர்வாதத்தின் போது, இனிமேல் போர் வேண்டாம் என்று  ​​உலக வல்லரசுகளுக்கு ஒரு செய்தியில், போப் லியோ XIV வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் போரில் “நீடித்த அமைதி”, காசாவில் போர் நிறுத்தம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சனிக்கிழமை ஒப்பந்தத்தை வரவேற்று அவர் அழைப்பு விடுத்தார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடம்…

சோவியத் கால வீனஸ் ஆய்வுக் கலம் 53 ஆண்டுகளுக்குப் பின்னர் பூமிக்குத் திரும்பியது

ரஷ்யாவின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெனெரா 4 தரையிறங்கும் ஆய்வின் பிரதிஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஆய்வுக் கலம் பூமிக்குத் திரும்பிச் சென்று, இந்தியப் பெருங்கடலில் விழுந்தது. கோஸ்மோஸ் 482 வெள்ளிக்குச் சென்றது. ஆனால் அதன் இலக்கை ஒருபோதும் அடையவில்லை. வெள்ளி கிரகத்தை ஆராய்வதற்காக மார்ச் 1972 இல் புறப்பட்ட…

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார் புடின்

காலதாமதமின்றி மே 15ஆம் திகதிக்குள் ரஷ்யாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். மோதலின் மூல காரணங்களை நீக்கி, நீடித்த, வலுவான அமைதியை நோக்கி நகரத் தொடங்க, நாங்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நாடுகிறோம் என்று அவர் சனிக்கிழமை கிரெம்ளினில் இருந்து ஒரு அரிய தொலைக்காட்சி சனிக்கிழமை நள்ளிரவு உரையில் கூறினார். துருக்கியின்…

புதிய போப் லியோ XIV: பேராயர்களுடன் முதல் திருப்பலியை நடத்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டுகால வரலாற்றில் முதல் வட அமெரிக்க போப்பான லியோ XIV , தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலுக்கு ஒரு நாள் கழித்து , வெள்ளிக்கிழமை வத்திக்கானில் கார்டினல்களுடன் தனது முதல் தனிப்பட்ட மறையுரையை நடத்தினார். புதிய போப், தன்னைத் தேர்ந்தெடுத்த 130க்கும் மேற்பட்ட கார்டினல்களுடன் சிஸ்டைன் தேவாலயத்தில், வத்திக்கானால் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட…

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக போப் லியோ XIV தேர்ந்தெடுக்கப்பட்டார்!

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் பிரீவோல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் போப் லியோ  XIV என்று அழைப்படுவார். இவர் திருச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க போப்பாண்டவர். 69 வயதான ரொபேர்ட் பிரீவோல்ட் , செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரின் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார். உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் என்று அவர்…

பாகிஸ்தானின்நிர்வாக காஷ்மீர் பகுதியில் தாக்குதல்களைத் தொடங்கியது இந்தியா!

பாகிஸ்தானின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் தாக்குதல்களை நடத்தியது என இந்தியா அறிவித்தது. இதேநேரம் இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. அவை பயங்கரவாத முகாங்கள் என்றும் தாக்குதல்கள் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும்  இந்தியா தெரிவித்தது.…

உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறித் டிரோன் தாக்குதல்கள்!

உக்ரைன் தொடர்ச்சியாக இரண்டாவது இரவும் மொஸ்கோ மீது இரவு நேர ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா கூறுகிறது. வான் பாதுகாப்பு பிரிவுகள் 105 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றிரவு தாக்குதல்களுக்குப் பின்னர் மொஸ்கோவின் நான்கு விமான நிலையங்களும் பல மணி நேரம் மூடப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.…

பெருவில் கடத்தப்பட்ட 13 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் தங்கச் சுரங்கத்தில் இறந்த நிலையில்  அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  தலைநகர் லிமாவிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வடக்கு லா லிபர்டாட் பகுதியில் உள்ள பெருவின் படாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு…