Category உலகம்

போப் பிரான்சிஸ் நல்ல மனநிலையில் இருக்கிறார்: வத்திக்கான்

போப் பிரான்சிஸ் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், வழக்கம் போல் சாப்பிடுவதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போப் பிரான்சிஸ் குறித்து இன்று திங்கட்கிழமை வத்திக்கான் ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டது. அதில் அறிக்கையில், போப்பாண்டவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்கிறார் என்றும் நேற்றிரவு இரவு நன்றாகச் சென்றது என்றும் கூறியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான்…

ஹிஸ்பொல்லா தலைவரின் இறுதிச் சடங்குகள்: 4 இலட்சம் மக்கள் பங்கேற்பு

கொல்லப்பட்ட ஹிஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கிற்காக பெய்ரூட்டில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.  மைதான விழாவிற்குப் பின்னர் ஹெஸ்பொல்லாவின் நஸ்ரல்லா பெய்ரூட்டில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடன் சவி ஹிஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் 400,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டதாக…

பறக்கும் கார் வானில் பறக்கிறது: நீங்களும் வாங்கலாம்!!

ஒரு பறக்கும் மகிழுந்து (கார்) கலிபோர்னியாவில் அதிகாரப்பூர்வமாகப் பறக்கத் தொடங்கியுள்ளது. நிலையான இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அதன் புதுமையான பறக்கும் காரின் புரட்சிகரமான நகர்ப்புற சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வின் வீடியோ காட்சிகள், சாலையில் ஓட்டுவதிலிருந்து வானத்தில் உயரும் வரை தடையின்றி மாறும் ஒரு…

போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது – வத்திக்கான்

போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் போப் பிரான்சிஸின் உடல்நிலை  கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாக வத்திக்கான் நேற்று சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புனிதத் தந்தை விழிப்புடன் இருக்கிறார். நேற்றையதை விட அவருக்கு உடல்நிலை சரியில்லை…

காசாவில் இருந்து 5 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

தெற்கு காசாவின் ரஃபாவில் இரண்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் விடுவித்துள்ளது. 40 வயதான தல் ஷோஹாம் மற்றும் 39 வயதான அவேரா மெங்கிஸ்டு ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுவதை ஒரு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்டியது.  சனிக்கிழமை காலை ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இரண்டு பணயக்கைதிகளும் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்துவிட்டதாக இஸ்ரேலிய…

நுழம்புகளைக் கொண்டு வருவோருக்கு பிலிப்பைன்சில் வெகுமதி அறிவிப்பு

இறந்த அல்லது உயிருள்ள நுழம்புகளை தருவோருக்கு ஒரு பரிசுத்தொகையை பிலிஸ்பைன் நாட்டின் நகர் ஒன்று அறிவித்துள்ளது.  ஆபத்தான டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வகையில் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர்ப் பகுதியான அடிஷன் ஹில்ஸ் நகராட்சி மன்றம் இந்த அறிவிப்பை முகநூலில் வெளியிட்டது. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து நுழம்புக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ (0.016…

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக இந்திய வம்சாவழி நபர் நியமனம்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ க்கு இந்திய வம்சாவழியான நபரான  காஷ் படேல் நிமயனம் பெற்றுள்ளார். இவரது பதவி செனட் வாக்கெடுப்பினால் உறுதி செய்யப்பட்டது. ஆதவாக 51 – 49 என்ற வாக்குகள் அடிப்படையில் இவரது இயக்குநர் பதவியை செனட் அங்கீகரித்தது. இந்தப் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்திருந்தார். முன்னதாக…

போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம்

இரட்டை நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் மேலும் அவரது இரத்த பகுப்பாய்வுகள் சீராக உள்ளன. அவரது இதயத்துடிப்புகள் நிலையாக உள்ளன என்று என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார். போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும்,…

காசாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உடல் பிபாஸின் தாயாருடையது அல்ல – இஸ்ரேல்

நேற்று வியாழக்கிழமை காசாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட நான்கு உடல்களில் ஒன்று, ஹமாஸ் கூறியது போல், பணயக்கைதி ஷிரி பிபாஸின் உடல் அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களான ஏரியல் மற்றும் கிஃபிர் (அவர்கள் இப்போது ஐந்து மற்றும் இரண்டு வயதுடையவர்கள்) இறந்துவிட்டார்கள் என்ற செய்தி…

இஸ்ரேல் பேருந்துகளில் குண்டுகள் வெடித்தன

இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்ததாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர். அதிகாரிகள் இந்த சம்பவத்தை “சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது. பேட்…