Category உலகம்

தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்கள் அதிகரிக்கிறது – ஐ.நா. எச்சரிக்கை

தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற  தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களின் பரவலில் உலகளாவிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கையானது  WHO, UNICEF மற்றும் Gavi நிறுவனங்களால் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.  கடந்த ஐந்து தசாப்தங்களாக தடுப்பூசிகள் 150 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. உலகளாவிய சுகாதாரத்திற்கான நிதி வெட்டுக்கள் இந்த…

ஜெலென்ஸ்கி அமைதி ஒப்பந்தத்திற்கு இடையூறாக இருகிறார் – டிரம்ப்

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினைச் சமாளிப்பது எளிதாக இருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். ரஷ்யாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் ஜெலென்ஸ்கியுடன் ஒரு ஒப்பந்தத்தைப் பெற…

வெளிறிய நிலையில் உலகில் 84% பவளப்பாறைகள்!

உலகில் உள்ள பவளப்பாறைகள் வெளிறிய நிறமாற்றத்தைச் சந்தித்து வருகின்றன என அறிவியாளர்கள் இன்று புதன்கிழமை அறிவித்தனர். 84% பவளப்பாறைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ஏற்கனவே 1998, 2014, 2017 ஆண்டுகளில் பவளப்பாறைகள் வெண்மையான நிகழ்வுகள் நடத்தேறியுள்ளன.  பவளப்பாறைகளுக்குள் வாழ்ந்து அவற்றை உண்ணும் வண்ணமயமான பாசிகள், நீரை வெப்பமாக்குவதன் விளைவாக நச்சுகளை உற்பத்தி செய்யத் தொடங்கும்…

போப்பின் உடலம் பசிலிக்காவுக்கு வந்தது: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்!

போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர். போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

பிரான்சிஸுக்குப் பின்னர் அடுத்த போப் யார்?

உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் அடுத்த போப்பாண்டவராகவும்,  தலைவராகவும் போப் பிரான்சிஸுக்குப் பின்னர் யார் வருவார்கள் என்பது குறித்த ஊகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும் கார்டினல்களின் மாநாடுதான் இறுதி முடிவை எடுக்கும். போப்பாண்டவர் தெரிவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆரம்பகால வலுவான போட்டியாளர்கள் வருகிறார்கள். வத்திக்கான் நகரத்தின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும்…

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (வத்திக்கான் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது. வத்திக்கான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

போப் அவர்களின் உடலம் அடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து என்ன நடக்கும்?

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் இறந்த பின்னர் அவரின் இடத்திற்கு புதிய போப்பாண்டவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். போப்பின் அக்க ஏற்பாடுகளை வத்திக்கான் செய்யும். இதற்கான விரிவான வழிமுறைகளை ஏற்கனவே போப் பிரான்சிஸ் அவர்கள் தனது வாழ்நாளில் வழங்கியிருக்கிறார். காலம் சென்ற முன்னால் போப் பாண்டவர்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது போன்று செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்,…

போப் பிராஸ்சிஸ் அவர்கள் காலமானார்

கத்தோலிக்க மக்களின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் தனது 88வது வயதில் இன்று காலை 7.35 மணியளவில் காலமானார். நேற்று ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மக்கள் முன்னிலையில் தோன்றி தனது வாழ்த்துக்களைக் கூறி ஆசீர்வாதத்தையும் வழங்கியிருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் போப்பாண்டவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார்,…

அமெரிக்காவில் டிரம்ப் எதிர்ப்பு பரவலான போராட்டங்கள்

அமெரிக்கா முழுவதும் னாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கொள்கைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு போராடினர். நேற்று சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் டிரம்பின் ஆக்ரோஷமான குடியேற்றக் கொள்கைகள், பட்ஜெட் வெட்டுக்கள், பல்கலைக்கழகங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் மீது அழுத்தம் கொடுப்பது மற்றும் உக்ரைன் மற்றும் காசாவில் மோதல்களை அவர்…

காங்கோ படகு தீ விபத்து: 148 பேர் உயிரிழந்தனர்

வடமேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள காங்கோ ஆற்றில் மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இருப்பினும் படகில் சுமார் 500 பயணிகள் இருந்ததால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம்…