Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சுமார் 36 கோடி ரூபாய் பெறுமதியான “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி ஊடாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இலங்கைக்கு வந்தபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமான முறையில் தோற்றியதாக தெரிவிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ‘இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு’ வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடக வலைத்தளத்தில் ஒளிபரப்பான…
இலங்கையின் வடபுலத்தில் தமது காற்றாலை மின்சக்தி திட்டத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக இந்திய வர்த்தகர் கௌதம் அதானியின் அதானி குழுமமான அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளது. தமது பணிப்பாளர் சபையின் முடிவை இலங்கைக்கு அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளதாக அதானி குழுமத்துக்கான பேச்சாளரொருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதானி குழுமம்,…
மீண்டும் மின்வெட்டு நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றைய தினம் வியாழக்கிழமையும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு மணித்தியாலம் மின்வெட்டு இடம்பெறும் எனவும் சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.…
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை புதன்கிழமை (12) மாலை 6 மணி…
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்தார். 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் ஏனையவை தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது. பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 09 பேர்…
போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம்…
கொழும்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர்…
தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது பொதுவான குறிக்கோள் எதுவென்று தீர்மானிக்கவேண்டும். அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். அக்கூட்டமைப்பில் உள்ளடங்கும் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கேள்வி – பதில் பகுதியில்…