Category இலங்கை

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்கு மேல் ஆட்சியில் இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மீதான அதிருப்தி பொதுமக்களிடையே மட்டுமல்ல, அரசாங்க அதிகாரிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியிலும் அதிகரித்து வருகின்றது. தொலைநோக்கு அல்லது அனுபவம் இல்லாத…

காணி பிடிக்காதாம் அனுர அரசு!

வர்த்தமானி மூலம் சுவீகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலங்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்க தரப்பினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், துறைசார் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இன்று நாடாளுமன்ற…

எம்மை சிறைக்கு அனுப்புவதால் மக்கள் பிரச்சினை தீராது!

எம்மை  சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு  கிடையாது. எம்மீது  முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  ராஜபக்ஷக்களையும், கடந்த  அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல்  சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.  பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் …

புலிகளின் தலைவருக்கு சிலை வைக்க மாட்டேன்

புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்ற  அமர்வில் நேற்றைய தினம் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், நாட்டில்…

தமிழின அழிப்பு நினைவகம்: கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன்நன்றி தெரிவிப்பு

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும்…

பிரதமருடனான சந்திப்பில் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்துவேன் – கஜேந்திரகுமார்

பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு,…

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடு முழுவதும் தற்போது 40 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.  இதன் போது கருத்துத் தெரிவித்த…

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்களை வழங்குங்கள்

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.  மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சி சபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.  இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில்…

ஐ.ம.சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. …

மகாவலி அதிகாரசபையின் பிரிவு முகாமையாளர் கைது

20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற மகாவெலி அதிகார சபையின் முகாமையாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.  ரணவிரு அறக்கட்டளையின் கீழ் வீடு கட்டுவதற்காக முறைப்பாட்டாளருக்கு மகாவலி அதிகாரசபையின் மூலம் வழங்கப்பட்ட எத்துகல பகுதியில் உள்ள 20 பேர்ச்…