Category இலங்கை

அத்துமீறல்களை கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய, தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே…

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – கூடி ஆராய்ந்த இராணுவ தளபதிகள் 

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…

கணேமுல்ல சஞ்சீவ கொலை – செவ்வந்தியின் தாயும் , தம்பியும் கைது 

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச்…

எல்லாம் பொய் :மின் கட்டணம் கூடும்!

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். “மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு செலவு என்பது இலாபமாகவோ அல்லது மீதியாகவோ செல்வதில்லை. எங்களை நிலைநிறுத்திக் கொள்ள…

தையிட்டி விகாரை பிரச்சனையை 06 மாத காலத்திற்குள் முடிப்போம் – சிவசேனை உறுதி

தையிட்டி விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.  யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.  மேலும் தெரிவிக்கையில்,   மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள…

காரின் மீது துப்பாக்கி சூடு – கஞ்சாவுடன் தம்பதி கைது

மாலபே பொலிஸ் பிரிவில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, காரில் பயணித்த தம்பதியினரை சுமார் 2 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.  மாலபே பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதி சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, ​ கார் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.  இதன்போது குறித்த…

4 நாட்களில் 8 கொலைகள்!

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.  தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப்…

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்ய உத்தரவு

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார்.  பெரும்பாலான குற்றங்களுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள…

தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதனை அடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும்…

பேருந்தில் பயண பையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டக்கள் மீட்பு

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.  குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு…