Category இலங்கை

சஞ்சீவ கொலை – நீதிமன்றில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.  குறித்த அறிக்கைக்கு அமைவாக, நீதிமன்றம் பொலிஸாருக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.  அதன்படி, பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட…

மரண சடங்கில் மோதல் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

மரண சடங்கில் மோதல் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு பத்தேகம, மத்தெவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.  மரண வீடொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது.  சம்பவத்தில் சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

சிறுமி சுட்டு படுகொலை – ஒருவர் கைது

குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிழந்த சம்பவம்தொடர்பில் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.  மகுலாகம பகுதியில் பன்றிகளை வேட்டையாடும்போது கவனக்குறைவாக சுடப்பட்டதன் விளைவாக சிறுமி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் பாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம்…

வெளிநாட்டு பயணங்களுக்காக மஹிந்த குடும்பம் செலவழித்த மில்லியன் ரூபாய்க்கள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார்.  பாராளுமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.  மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர்,  ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.  மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல்…

கழுதைக் கடத்தல் முறியடிப்பு

கழுதைக் கடத்தல் முறியடிப்பு சட்டவிரோதமாக 6  கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை கைப்பற்றி  சாரதிகளை நுரைச்சோலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நுரைச்சோலைக் காவல்துறை நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுரைச்சோலை காவல்துறை இந்த சுற்றிவளைப்பை…

குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையானார் நாமல்!

குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையானார் நாமல்! இலங்கை பொதுஜன பெரமின (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (26) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஆஜரானார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

5 வருட இடைவெளிக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள்

ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நீண்டகால இறக்குமதித் தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் வாகனத் துறையில்…

இலங்கையில் முதலாவது ஷெல் எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் போர்க்ஸ் (தனியார்) லிமிடெட் மேலும் இவற்றின் துணை நிறுவனங்கள் 2024…

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவிக்கிறது.  வணிகர்கள் திவாலான தங்கள் வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என அதன் தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்தார்.  நாங்கள் உங்களிடம்…

12 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்காவில் கைது 

சுமார் ரூ.12 மில்லியன் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.  குறித்த பெண், தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து ஹொங்கொங் வழியாக இலங்கைக்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 38…