Category இலங்கை

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் வாய் திறக்கவில்லை

அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.…

இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தம்?

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோம். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் அவற்றை இரகசியமாக பேண வேண்டும். கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச…

வாகன இறக்குமதி:தொடரும் கைதுகள்!

சுமார் 25கோடி மதிப்புள்ள ( 250 மில்லியன் மதிப்புள்ள ) 21 மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக  இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள  நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில்  மறைத்து    வைத்திருந்ததற்காக இருவர் கைதாகியுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஜூலை 25 ஆம் திகதி…

வெற்றிலை , பாக்கு- தட்டுப்பாடு!

வெற்றிலை , பாக்கு- தட்டுப்பாடு! தூயவன் Sunday, July 13, 2025 இலங்கை இலங்கையில் உப்பினை தொடர்ந்து வெற்றிலை பாக்கிற்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். …

செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  அவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர்…

எரிக் மேயர்-இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்!

எரிக் மேயர்-இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்! தூயவன் Saturday, July 12, 2025 அமெரிக்கா, இலங்கை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயரை வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எரிக் மேயரின் பெயரை அமெரிக்க செனட்டில் உறுதிப்படுத்துவதற்காகப் பரிந்துரைத்துள்ளார். எரிக் மேயர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட…

கொள்கலன்களில் புலிகளின் ஆயுதங்கள் இருந்ததாக தெரிவித்தவர்கள் விசாரணைக்கு செல்ல அச்சமடைவது ஏன்?

பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற  சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும் என  அமைச்சர்  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்.…

கடந்த 07 மாதங்களில் 66 துப்பாக்கி சூடுகள் – 37 பேர் உயிரிழப்பு

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அவற்றில் 48 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக…

உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் பிள்ளையானுக்கு ஏற்கனவே தெரியும்: அமைச்சர்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் இருந்தபோதே, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான…

செம்மணி புதைகுழி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: சர்வதேச விசாரணை வேண்டும் – சாணக்கியன்

செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்  இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன் அதில் சர்ச்சைக்குரிய…