Category இலங்கை

50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் நடத்தப்பட்ட கொலை

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும், இதற்காக இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி…

மீண்டும் தலைதூக்கும் 'சிக்கன்குன்யா'

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே சிக்குன்குன்யா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த நோய் தற்போது ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் முழுவதும் பரவும் ஒரு…

மூன்று மாத்தினுள் 22 கொலை!

இலங்கையில் குற்றச்செயல்கள் முனைப்படைந்துவருகின்ற நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இன்று (23) வரை 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வெலிகம, அஹங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொட, மித்தெனிய, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம,…

முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்!

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.  குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த சட்டத்தின் மூலம்,…

இரவு விடுதியில் மோதல் யோஷிதவின் கும்பலை தேடும் பொலிஸார்

இரவு விடுதியில் மோதல் யோஷிதவின் கும்பலை தேடும் பொலிஸார் கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்தின் சந்தேக…

T-56 ரக தோட்டாக்களுடன் ஒருவர் கைது

ஆதீரா Sunday, March 23, 2025 இலங்கை பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவல் மைதானத்திற்கு அருகில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று  இரவு கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கிக்கான  07 தோட்டாக்கள் மற்றும் …

தென்னக்கோன் வெளியிலிருந்து புரியாணி?

 ராஜபக்சக்களது பணிப்பில் பாதாள உலகை கும்பலை வைத்து கொலைகளை முன்னெடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   தும்பர சிறைச்சாலை அதிகாரிகளிடம், வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு, தேசபந்து தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நியாயமான காரணங்களை முன்வைக்கப்படும்…

தெவுந்தரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் சுட்டுக்கொலை!

தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலாவின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சிங்கசன சாலையில் நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிற்றூர்தியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், உந்துருளியில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் இரண்டு…

விற்பனைக்கு சம்பூர்?

வெளிநாடுகளிற்கு இலங்கை மண்ணை விற்க அனுமதியோம் என களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி திருகோணமலையில் சூரிய மின்படலம் மூலமான மின் உற்பத்தி முதலீட்டிற்கு மோடிக்கு செங்கம்பள வரவேற்பினை வழங்குகின்றது. அதற்கேதுவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவரது வருகையின் போது சம்பூர் மின் உற்பத்தி…

ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியது

இலங்கை விமானப் படையின் சீன K-8 பயிற்சி விமானம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விமானப்படை கருத்து தெரிவிக்கையில்,  குறித்த விபத்தின் போது விமானத்தில் இருந்த…