Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக நாளை (03) வரை தேர்தல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) மீண்டும் குறித்த தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த மனுக்கள்…
பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் திகதி இராமேஸ்வரம்…
ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேகித்த வீதி, வத்தளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் பெண்ணொருவர் சடலமாக காணப்படுவதாக வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளை…
கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைக்கு தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த தோற்றமுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார…
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரச தலைவர் என்ற பதவிக்கான கடமைகளில் இருந்து விலகி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை தேர்தல் பிரச்சாரங்கள் ஊடாக நிறைவேற்றுகிறார். இதுவா சிறந்த அரசியல் கலாச்சாரம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றைய…
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை நாளை (02) வரை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில்…
தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் ஆட்சி நிலவும்…
அரச சேவையில் 30ஆயிரம் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அரச வேலைகளுக்கு இப்போது…
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கை வந்த இந்திய மீனவர்கள் பிரதிநிதிகளில் ஒருவர் இலங்கையில் இருந்து தப்பியோடியுள்ளார் இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேச்சுக்களை நடாத்த இந்தியாவில் இருந்து மீனவர்களின் பிரதிநிதிகள் ஐவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். குறித்த ஐவரில் ஒருவரின் படகு கடந்த மாதம் மன்னார்…