Category இலங்கை

திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து நீதிமன்றம்  வழங்கும் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுகிறோம். திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பில்  வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும்…

மின் கட்டணத்தை குறைப்பதில் சிக்கல்

செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது, இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது.  இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது. 2024 இல் மின்சார…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.   கொழும்பு, மாக்கும்புர, கடுவெல, கடவத்தை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தங்களது பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து…

ஓய்வு நேரத்தில் களவில் இலங்கை இராணுவம்!

வவுனியாவின் பல பகுதிகளிலும் வீதியால் சென்ற பெண்களை பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்ததாக வவுனியாவில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.  வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற சங்கிலி அறுப்பு சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.  அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவை…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ரணிலுக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.  ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.  2016 ஆம் ஆண்டு அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு கணக்கை முதிர்ச்சியடைவதற்கு…

Govpay மூலம் அபராதம் செலுத்தும் முறை குறித்து விளக்கம்

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத சீட்டினை சாரதிகள் ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் குறித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், இதில் உரையாற்றிய ICTAயின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க, குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான 11 பொலிஸ்…

நிராகரிக்கப்பட்ட 35 உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்க நீதிமன்றம் உத்தரவு

சமாதான நீதவான்களால் பிறப்புச் சான்றிதழ்களை சான்றளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் காரணமாக நிராகரிக்கப்பட்ட பல வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 35 வேட்புமனுக்களை இன்று (10) மீண்டும் ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு…

போக்குவரத்து தண்டத்தை ஒன்லைன் மூலம் செலுத்தலாம்

போக்குவரத்து தண்டத்தை ஒன்லைன் மூலம் செலுத்தலாம் போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.  அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம் இந்தக் கொடுப்பனவுகளைச் செய்யலாம்.  இந்த திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியின் 11 இடங்களில்…

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு கடமையில் 35,000 பொலிஸார்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  அதற்கமைய, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.  குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு…