Category இலங்கை

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.  ‘போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதித்ததுடன் பிரிட்டனின் கடமை முடியவில்லை. பிரிட்டன் இன்னும்…

ஊழலைத் தடுப்பதற்காக மாகாணசபைகளில் புலனாய்வுப் பிரிவு!

ஊழல்களையும் மோசடிகளையும் தடுப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் அமைச்சு மட்டத்திலான புலனாய்வுப் பிரிவுகளை ஏற்படுத்த ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஜனாதிபதிக்கும், ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  இதன்போதே, ஜனாதிபதியால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாகாணங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை…

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடுபவர்கள் அடிப்படைவாத குழுவினராம்

யாழ்ப்பாணம் – திஸ்ஸ விகாரைக்கு முன்னால், பௌத்த விகாரைக்கு எதிராகப் போராடுபவர்கள் அடிப்படைவாதக் குழுவினர். அவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இடம்பெறும் போராட்டங்கள் பௌத்த தர்மம் மீதான தாக்குதலாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு…

கொழும்பு மாநகரை நாமே கைப்பற்றுவோம்

கொழும்பு மாநகரை நாமே கைப்பற்றுவோம் ஆதீரா Friday, May 16, 2025 இலங்கை கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். இது உறுதி என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவித்ததாவது, மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.  ஆனால், அதைப்பற்றி எமக்குக்…

சர்வதேச சமூகம் தலையீட்டை கோரியுள்ள தமிழ் தேசிய பேரவை

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக்கோரி  தமிழ் தேசிய பேரவையினருக்கும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் கொழும்பில் இன்றைய தினம் புதன்கிழமை  இடம்பெற்றது . தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  பொதுச் செயலாளர் செல்வாராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய பசுமை…

கனடா தூபி : நல்லுறவை சிதைக்குமாம்?

தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கனடா அங்கீகரித்து திறப்பு விழா நடாத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்துள்ளார். இதனிடையே கனடாவின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் திறப்பதில் கனடா அரசின் நடவடிக்கை குறித்து தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு…

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு ஆபத்து- நாமல் எச்சரிக்கை

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு ஆபத்து- நாமல் எச்சரிக்கை கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து,  இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.  அத்துடன் கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து முறையாக எதிர்ப்புத் தெரிவிக்கவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதல்…

கூட்டமைப்பை தடை செய்யாதது மஹிந்த செய்த தவறு

கனடாவில் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் வீரசேகர தெரிவித்தார். கனடாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் இனங்களுக்கிடையில் வீண்…

ஆட்சி அமைப்பதற்கு இடையூறு அளித்தால் நாமும் அவ்வாறே பதிலடி வழங்குவோம்

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், அந்தக் கட்சிக்கும் நாங்கள் தடைகளை ஏற்படுத்த நேரிடுமென என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில்…

நாடு பூராகவும் உப்பு தட்டுப்பாடு

நாடு பூராகவும் உப்பு தட்டுப்பாடு ஆதீரா Tuesday, May 13, 2025 இலங்கை உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதன்…